.

Pages

Friday, November 18, 2016

துபாய் - அபுதாபி நெடுஞ்சாலையில் டிரைவர் இல்லா வாகன பரிசோதனை வெற்றி !

அதிரை நியூஸ்: துபாய், நவ-18
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் துபையின் 25 சதவிகித போக்குவரத்தை ஓட்டுனர் இல்லா வாகனங்கள் மூலம் இயக்க திட்டமிடப்பட்டு வரும் நிலையில் துபை பிஸ்னஸ் பே பகுதியில் EZ10 என்ற டிரைவரில்லா வாகனம் தொடர்ந்து சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், துபை போக்குவரத்து துறையின் (RTA) ஒத்துழைப்புடன் பிரசித்திபெற்ற மெர்ஸிடஸ் கார் நிறுவனம் E-300 எனும் தனது டிரைவர் இல்லா வாகனத்தை துபை ஜெபல் அலியிலிருந்து அபுதாபி நகரின் மத்திய பகுதிவரை இயக்கி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

இந்த காரை இயக்குவதற்கு ஸ்டியரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக் என எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் லேன் மாறுவதற்கு மட்டுமே இன்டிகேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பரபரப்பு நிறைந்த துபை அபுதாபி நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் வெற்றி டிரைவர் இல்லா வாகனத்திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.