.

Pages

Sunday, November 27, 2016

விவசாய நிலங்கள் ஆய்வு ! ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உணவுத்துறை முதன்மை செயலருமான பிரதீப்யாதவ், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை
கிராமம் கிராமாக சென்று விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள், தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நெற்பயிர்களை பார்வையிட்டும், விவசாயிகளை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டும் இன்று (27.11.2016) நேரடியாக ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர், பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த  பூதலூர், பூதராயநல்லூர், விண்ணமங்கலம், கோவில்பத்து, இராயந்தூர், பெரம்பூர், சூரக்கோட்டை, மேலஉளுர், பருத்திக்கோட்டை, கண்ணந்தங்குடி மேற்கு, ஆவிடநல்லவிஜயபுரம், தொண்டராம்பட்டு, துவரங்குறிச்சி, பட்டுக்கோட்டை ஆகிய கிராமங்களில் கிராமம், கிராமாக சென்று வேளாண் பயிர் சாகுபடிகள் செய்யப்பட்டுள்ள இடங்களில் நேரடியாக விவசாயிகளை சந்தித்தும், மற்றும் விவசாய விளைநிலங்கள் நேரடியாக பார்வையிட்டும், சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டள்ளதையும், நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளதையும், தற்போது தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி வருவதையும், விளைநிலங்கள் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளிடமும் கேட்டறிந்தார்.

தற்போது 35 நாட்கள் நெற்பயிரும், 80 நாட்கள் நெற்பயிரும் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதையும், இன்னும் 80 நாட்கள் நெற்பயிருக்கு தண்ணீர் தேவை என்பதையும் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், உணவுத்துறை முதன்மை செயலருமான பிரதீப்யாதவ் மாவட்டத்தில் அனைத்துத்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவுத்துறை முதன்மை செயலருமான பிரதீப்யாதவ் மாவட்டத்தில் அனைத்துத்துறை வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்தார்.

இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.மந்திராசலம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிமாறன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், துணை இயக்குநர் (பொ) ஈஸ்வர், கூடுதல் இயக்குநர் கா.நெடுஞ்செழியன் (சென்னை) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சொக்கலிங்கம் (வேளாண்மை)ää வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, (பட்டுக்கோட்டை), வட்டாட்சியர்கள் குருமூர்த்தி (தஞ்சாவூர்), திருமதி.தமிழ்ஜெயந்தி (ஒரத்தநாடு), ரவிச்சந்திரன் (பட்டுக்கோட்டை) ஆகியோர் உடன் இருந்தனர். வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.