.

Pages

Friday, November 18, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் நடந்த விபத்தில் டெம்போ வாகன ஓட்டுனர் பலி !

அதிராம்பட்டினம், நவ-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ராமமூர்த்தி ( வயது 25 ). டெம்போ வாகன ஓட்டுனர். இவர் நேற்று வியாழக்கிழமை இரவு அதிராம்பட்டினம் ஈசிஆர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். வாகனம் தவ்ஹீத் பள்ளி அருகே சென்ற போது குறுக்கே சைக்கிளில் முதியவர் ஒருவர் திடிரென புகுந்தார். இதனால் நிலைதடுமாறி ராமமூர்த்தி சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

பிரத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 comment:

  1. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.