.

Pages

Tuesday, November 29, 2016

பேரூராட்சி பகுதிகளின் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி !

தஞ்சாவூர் மாவட்டம், பேரூராட்சி பகுதிகளின் சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று திங்கள்கிழமை முதல் தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்) திட்டம் மற்றும் விதிகள் 2015 விதி எண்.26-ன் கீழ் அறிவிக்கை.

தமிழ்நாடு அரசிதழ்  எண்.230 (அசாதாரணம்) நாள் 02.11.2015-ல் தமிழ்நாடு தெரு வியாபாரிகள் (வாழ்வதார பாதுகாப்பு மற்றும் தெருவியாபாரம் முறைப்படுத்துதல்) திட்டம் மற்றும் விதிகள் 2015-ல் The Tamilnadu street Vendors ( Protection of livelihood and Regulation of street vending )  Scheme and Rules 2015 விதிகளை இயற்றி அவ்விதிகளில் தமிழ்நாடு தெருவியாபாரிகள் நலன் கருதி திட்டம் தீட்டுதல், தெருவியாபாரிகளின் கணக்கெடுப்பு நிபந்தனைக்குட்படுத்தி தகுதியுடையவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், வியாபாரம் வாரியாக வகைப்படுத்துதல், அடையாளச்சான்றிதழ் வழங்குதல்,  பரப்பளவிற்கு ஏற்ப வியாபார கட்டணம் செலுத்துதல், சான்றிதழை இரத்து செய்தல், மாற்று இடம் ஒதுக்குதல், தகுதியற்ற இடங்களில் வியாபாரம் செய்வதை கட்டுப்படுத்துதல், சுற்றுப்புற சூழலை துhய்மைப்படுத்துதல் ஆகிய இனங்களைக் கொண்டு உரிய படிவங்கள் வரையறுக்கப்பட்டு இப்பொருளுக்கான சட்டம் மற்றும் விதிகள் வடிவமைக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 22 பேரூராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், மேற்படி திட்டம் மற்றும் சட்ட விதிகளை   பேரூராட்சிகளில் முறையே நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இவ்வறிவிக்கை வெளியிடப்படுகிறது.

இக்கணக்கெடுப்பு பணியின் போது, சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் நபர்கள் தங்களது பெயர், வசிக்கும் நிரந்தர முகவரி, பிறந்த தேதி, வகுப்பு, வாக்காளர் அடையாள அட்டை / குடும்ப அட்டை / ஆதார் எண், செய்யும் தொழில், வியாபாரம் செய்யும் இடத்தின் அமைவிடம் முதலான சுய விவரங்களை, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி பணியாளர்களிடம்  தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நேற்று  28.11.2016 ஆம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.