அதிரை நியூஸ்: துபாய், நவ-27
துபாயில் தொழிலதிபராக உள்ளவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நீலேஷ் பாட்டியா. சுமார் 20 வருடங்களுக்கு முன் தேரா துபை, முஸல்லா ரோட்டில் Dream Way Cafeteria எனும் டீக்கடை ஒன்றைத் துவங்கினார். இன்று அவருடைய தொழில் விரிவடைந்து அவருடைய மூன்றாவது நிறுவனமாக Key Fashion Electronics Trading எனும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் ஷோரூமை திறந்துள்ளார்.
நீலேஷ் பாட்டியா தன்னுடைய புதிய நிறுவனத்தை திறந்து வைக்க எடுத்த முடிவு வெகுவாக பாரட்டத்தக்கது. ஆம், தன்னுடைய டீக்கடையில் 20 ஆண்டுகளாக நேர்மையாக, சிறப்பாக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த முஹமது ஷாபி (வயது 50) எனும் பணியாளரையே திறப்பாளராக தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சியூட்டினார். மேலும் கடையை திறந்தவுடன் முஹமது ஷாபியை பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். ஷோரூம் திறக்கப்படும் வரை இந்த செய்தியை யாருக்கும் தெரிவிக்காமலும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்.
ஷோரூமை திறந்து வைத்ததுடன் மொபைல் ஹெட்போன் ஒன்றை 200 திர்ஹம் கொடுத்து விலைக்கு வாங்கிய முஹமது ஷாபி தான் துவங்கி வைத்த முதல் வியாபாரத்திற்கு மீதி சில்லறையை கூட பெற்றுக் கொள்ளாததுடன் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை இனிப்பு வழங்கி வரவேற்று மகிழ்வதில் பிஸியானார். ஏனிந்த பாசம்?...
நீலேஷ் பாட்டியா பெற்றிருப்பது சிறந்த தொழிலாளர்களை, அதேபோல் அந்த தொழிலாளர்கள் பெற்றிருப்பது தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து உதவிடும் நல்ல மனம் கொண்ட முதலாளியை!
சில வருடங்களுக்கு முன் முஹமது ஷாபி, 12 வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய தனது மகனை தன் ஏழ்மை சூழலின் காரணமாக துபையில் ஒரு தொழிலாளியாக பணியாற்ற விசா எடுக்க முயன்றபோது, நீலேஷ் பாட்டியா அவர்கள் அம்முயற்சியை தடுத்து நிறுத்தி 15 ஆயிரம் திர்ஹங்களை வழங்கி கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர உதவியுள்ளார். விளைவு, இன்று முஹமது ஷாபியின் மகன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பட்டம் பெற்று 'அல் அய்ன்' நகரில் பொறியாளராக அலுவலக பணியாற்றுகின்றார்.
தனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌவரத்தால் கண்கள் பணிக்க, உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கும் முஹமது ஷாபியை நீலேஷ் அவர்கள் மட்டுமல்ல முஹமது ஷாபியுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களும் அவரின் எளிமையான குணத்திற்காக கொண்டாடுகின்றனர். இந்த செய்தி அமீரகத்தின் முன்னணி பத்திரிக்கையில் வெளியானதன் மூலம் இன்னும் அவர்களிருவரும் போற்றப்படுகின்றனர், இதுவும் ஒருவகை கண்ணியமான அங்கீகாரம் தான்.
போட்டோஷாப் டீக்கடை மாடுகள் என்னதான் முயன்றாலும் உள்ளத்தால் இணைந்த இந்தியர்களை பிரிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாயில் தொழிலதிபராக உள்ளவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நீலேஷ் பாட்டியா. சுமார் 20 வருடங்களுக்கு முன் தேரா துபை, முஸல்லா ரோட்டில் Dream Way Cafeteria எனும் டீக்கடை ஒன்றைத் துவங்கினார். இன்று அவருடைய தொழில் விரிவடைந்து அவருடைய மூன்றாவது நிறுவனமாக Key Fashion Electronics Trading எனும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் ஷோரூமை திறந்துள்ளார்.
நீலேஷ் பாட்டியா தன்னுடைய புதிய நிறுவனத்தை திறந்து வைக்க எடுத்த முடிவு வெகுவாக பாரட்டத்தக்கது. ஆம், தன்னுடைய டீக்கடையில் 20 ஆண்டுகளாக நேர்மையாக, சிறப்பாக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த முஹமது ஷாபி (வயது 50) எனும் பணியாளரையே திறப்பாளராக தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சியூட்டினார். மேலும் கடையை திறந்தவுடன் முஹமது ஷாபியை பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தார். ஷோரூம் திறக்கப்படும் வரை இந்த செய்தியை யாருக்கும் தெரிவிக்காமலும் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்.
ஷோரூமை திறந்து வைத்ததுடன் மொபைல் ஹெட்போன் ஒன்றை 200 திர்ஹம் கொடுத்து விலைக்கு வாங்கிய முஹமது ஷாபி தான் துவங்கி வைத்த முதல் வியாபாரத்திற்கு மீதி சில்லறையை கூட பெற்றுக் கொள்ளாததுடன் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை இனிப்பு வழங்கி வரவேற்று மகிழ்வதில் பிஸியானார். ஏனிந்த பாசம்?...
நீலேஷ் பாட்டியா பெற்றிருப்பது சிறந்த தொழிலாளர்களை, அதேபோல் அந்த தொழிலாளர்கள் பெற்றிருப்பது தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து உதவிடும் நல்ல மனம் கொண்ட முதலாளியை!
சில வருடங்களுக்கு முன் முஹமது ஷாபி, 12 வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேறிய தனது மகனை தன் ஏழ்மை சூழலின் காரணமாக துபையில் ஒரு தொழிலாளியாக பணியாற்ற விசா எடுக்க முயன்றபோது, நீலேஷ் பாட்டியா அவர்கள் அம்முயற்சியை தடுத்து நிறுத்தி 15 ஆயிரம் திர்ஹங்களை வழங்கி கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பை தொடர உதவியுள்ளார். விளைவு, இன்று முஹமது ஷாபியின் மகன் தகவல் தொழிற்நுட்பத் துறையில் பட்டம் பெற்று 'அல் அய்ன்' நகரில் பொறியாளராக அலுவலக பணியாற்றுகின்றார்.
தனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌவரத்தால் கண்கள் பணிக்க, உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்திருக்கும் முஹமது ஷாபியை நீலேஷ் அவர்கள் மட்டுமல்ல முஹமது ஷாபியுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களும் அவரின் எளிமையான குணத்திற்காக கொண்டாடுகின்றனர். இந்த செய்தி அமீரகத்தின் முன்னணி பத்திரிக்கையில் வெளியானதன் மூலம் இன்னும் அவர்களிருவரும் போற்றப்படுகின்றனர், இதுவும் ஒருவகை கண்ணியமான அங்கீகாரம் தான்.
போட்டோஷாப் டீக்கடை மாடுகள் என்னதான் முயன்றாலும் உள்ளத்தால் இணைந்த இந்தியர்களை பிரிக்க முடியாது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.