தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் இம்மாதம் 19-ஆம் தேதி வாக்கு பதிவு நடந்தது. 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதி உட்பட போட்டியிட்ட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து அதிமுகவினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி, வெடி வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
//அண்ணா திமுக வெற்றி//இடை தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சாதனை அல்ல.அது சாதார்ணமே.
ReplyDelete