.

Pages

Sunday, November 27, 2016

சவூதியா விமானத்தில் தமிழக உம்ரா பயணி மரணம் !

அதிரை நியூஸ்: நவ-27
கடந்த வியாழன் காலையில், ஜித்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த சவுதியா விமானத்தில் குடும்பத்துடன் பயணித்த முஹமது அப்துல் முத்தலீப் என்ற 63 வயதுடைய தமிழகத்தை சேர்ந்த பிரயாணி விமானம் ஓமன் நாட்டிற்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது மரணமடைந்ததை தொடர்ந்து விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று வரை மஸ்கட்டில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடல் இன்று சவுதி, ஓமன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் ஒருங்கிணைந்த ஆவண சரிபார்ப்பு வேலைகளுக்குப் பின் இந்தியா எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உம்ரா ஏற்பாட்டாளர் மக்சூத் சாஹிப் என்பவர் தெரிவித்தார். எனினும், இறந்தவருடைய குடும்பத்தவர்கள் விசா பிரச்சனையின் காரணமாக ஒமனில் உள்நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் சென்னைக்கு அதே விமானத்தில் சென்றனர்.

Source: Times of Oman
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.