அதிராம்பட்டினம், நவ-26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டிய பள்ளங்களை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக இவ்வழியே பள்ளி வாகனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு கடந்து செல்கின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிக்காக சாலையின் குறுக்கே அடிப்பகுதியில் பள்ளம் தோண்டி குழாய்கள் புதைக்கப்பட்டது. இந்தப்பணிக்காக சாலையின் இருபுறமும் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரையில் பள்ளம் மூடப்படமால் கிடக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் குழிக்குள் விழுந்து படுகாயமடைகின்றனர். மேலும் பள்ளங்கள் உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலை பழுதடைந்து வருகிறது.
இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் ஆபத்தை வரவழைக்கும் வகையில் உள்ள இந்த மெகா பள்ளங்களால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாததற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் கூட்டு குடிநீர் திட்டப்பணிக்காக தோண்டிய பள்ளங்களை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக இவ்வழியே பள்ளி வாகனங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு கடந்து செல்கின்றன.
இந்நிலையில், கடந்த மாதம் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிக்காக சாலையின் குறுக்கே அடிப்பகுதியில் பள்ளம் தோண்டி குழாய்கள் புதைக்கப்பட்டது. இந்தப்பணிக்காக சாலையின் இருபுறமும் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்து ஒரு மாதம் ஆகியும் இதுவரையில் பள்ளம் மூடப்படமால் கிடக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் குழிக்குள் விழுந்து படுகாயமடைகின்றனர். மேலும் பள்ளங்கள் உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலை பழுதடைந்து வருகிறது.
இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் சாலையில் ஆபத்தை வரவழைக்கும் வகையில் உள்ள இந்த மெகா பள்ளங்களால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாததற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.