.

Pages

Thursday, November 24, 2016

அதிரை அருகே அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி !

அதிராம்பட்டினம், நவ-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் சண்முகம் (வயது 50). கூலித்தொழிலாளி. இன்று காலை தனது இல்லத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு தாமரங்கோட்டை சென்றுகொண்டிருந்தார். தாமரங்கோட்டை ஒத்தகடை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பட்டுக்கோட்டையிலிருந்து பெருகவாழ்ந்தான் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து சண்முகம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநர் திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவல் அருகே புதூர் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 31 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சண்முகத்திற்கு பெரியநாயகி என்ற மனைவியும், ராஜ்குமார், பாலா என இரு மகன்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.