.

Pages

Thursday, November 24, 2016

மீன், இறால் பண்ணை அமைக்க அரசு மானியம்: விண்ணப்பிக்க அழைப்பு !

தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் மீன்வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் நன்னீர் மீன்வளர்ப்பு / உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக கீழ்க்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

1. புதிய மீன்பண்ணைக் குளங்கள் / குட்டைகள் அமைத்தல்:- 
ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவினத் தொகை ரூ.7.00ஃ- இலட்சத்தில் 50 விழுக்காடு ரூ.3.50/- இலட்சம் மானியத் தொகை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படும்.

2. ஏற்கனவே உள்ள மீன்வளர்ப்பு குளங்கள் ஃ தொட்டிகளை சீரமைத்தல்ஃ புதுப்பித்தல்:- 
ஒரு ஹெக்டேருக்கு ஆகும்  செலவினத்தொகை ரூ.3.50/- இலட்சத்தில் 50 விழுக்காடு மானியம் ரூ.1.75 இலட்சம் வழங்கப்படும்.

3. நன்னீர் மீன்வளர்ப்பு இடுப்பொருள் செலவினம்:- 
ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.1.50 இலட்சத்தில் 50 விழுக்காடு மானியம் ரூ.0.75 இலட்சம் வழங்கப்படும்.

4. உவர்நீர் இறால் வளர்ப்பு இடுப்பொருள் செலவினம்:- 
ஒரு ஹெக்டேர் மீன்வளர்ப்பிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3.00 இலட்சத்தில் 50 விழுக்காடு மானியம் ரூ.1.50 இலட்சம் வழங்கப்படும்.

5. நன்னீர் மீன்வளர்ப்பு ஃ உவர் நீர் இறால் வளர்ப்புக் குளங்களில் சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் மோட்டார் ஃ காற்றுப்புகுத்தி மற்றும் விளக்குகள் அமைத்தல் :- 
ஒரு ஹெக்டேருக்கு ஆகும் செலிவனத் தொகை ரூ.15.00 லட்சத்தில் 50 விழுக்காடு ரூ.7.50 லட்சம் மானியத் தொகையாக வழங்கப்படும்.

மேற்படி திட்டத்தில பயன் பெற விருப்பமுள்ளவர்கள் தஞ்சாவூர், 873/4, கீழவாசல், அண்ணாசாலை, தொலைபேசி எண்:04362-235389 எனும் முகவரியில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள், விவசாயிகள் இந்த விளம்பரம் வெளிவந்த 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* File Image

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.