அதிராம்பட்டினம், நவ-23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியின் சாலை நடுவில் உடைந்து போன கழிவு நீர் வடிகாலை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்; அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் இஜாபா பள்ளி அருகே உள்ள சாலையின் நடுவில் உள்ள கழிவு நீர் வடிகால் மேல்பகுதி உடைந்து ஆபாத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியே பள்ளிக்கூடம், பள்ளிவாசலுக்கு செல்லும் மாணவர்கள், தொழுகையாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரும்பு கம்பிகள் சாலையின் நடுவில் நீண்டு காணப்படுவதால் இரவு நேரத்தில் இச்சாலையை கடந்து செல்வோர், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பழுதடைந்த கழிவு நீர் வடிகாலை சம்பந்தப்பட்ட அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்தினர் உடனடியாக சரிசெய்து தர வேண்டும்' என்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் 21 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியின் சாலை நடுவில் உடைந்து போன கழிவு நீர் வடிகாலை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்; அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் இஜாபா பள்ளி அருகே உள்ள சாலையின் நடுவில் உள்ள கழிவு நீர் வடிகால் மேல்பகுதி உடைந்து ஆபாத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியே பள்ளிக்கூடம், பள்ளிவாசலுக்கு செல்லும் மாணவர்கள், தொழுகையாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரும்பு கம்பிகள் சாலையின் நடுவில் நீண்டு காணப்படுவதால் இரவு நேரத்தில் இச்சாலையை கடந்து செல்வோர், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பழுதடைந்த கழிவு நீர் வடிகாலை சம்பந்தப்பட்ட அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்தினர் உடனடியாக சரிசெய்து தர வேண்டும்' என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.