.

Pages

Friday, November 25, 2016

அதிரையில் வங்கி முன் பொதுமக்கள் மறியல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், நவ-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த  சில நாள்களாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க முடியாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. பணத் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அதிராம்பட்டினத்தில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுப்பதற்கும், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கும் பொதுமக்கள் நாள் முழுக்க வங்கி வாசலில் நிற்கின்றனர்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை அதிரை ஈசிஆர் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி வாசலில் காத்திருந்த பொதுமக்களிடம், வங்கியில் பணம் இல்லை என வங்கி தரப்பில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த, அதிராம்பட்டினம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் 150 பேருக்கு ரூ 4000 வீதம் இன்று வெள்ளிக்கிழமை பணம் வழங்கினர். மீதமுள்ள 350 பேருக்கு டோக்கன் வழங்கி வரும் திங்கள்கிழமை பணம் பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
 
 
  

4 comments:

  1. ஒரு டவ்ட் அதிரை நீவ்சுக்கும் கனரா வங்கிக்கும் நெருக்கம் அதிகமோ ஒரு இடத்தில் கூட கனராபேன்ங்கின் பெயர் இடம்பெரவில்லை கனரா பேங்கின் முகப்பு பெயர் பலகயின் புகைப்படமும் இல்லை காரனம் என்ன அதிரை நீவ்ஸ் கன்டிப்பாக பதில் சொல்லவும்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. முக்கியமான கேள்வி இந்த நேரத்துல. பதில சொல்லுங்கப்பா இவருக்கு.... இல்லாட்டி விபரிதமாகிவிடும்

      Delete
  3. அடிப்பட்டதும் அடிமைப்பட்டதும் வஞ்சிக்கப்பட்டதும் போதும் !

    அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராக வீறுகொண்டு வெகுண்டெழு சமுதாயமே !!

    போராடாத சமுதாயம் வரலாறு படைக்க முடியாது !!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.