.

Pages

Saturday, November 19, 2016

எமிரேட்ஸ் விமான விபத்து தவிர்ப்பு: சிறப்பு விசாரனைக் குழு அமைப்பு!

அதிரை நியூஸ்: துபாய், நவ-19
கடந்த வாரம் லண்டனில் இருந்து துபை வந்த எமிரேட்ஸ் A380 ரக சூப்பர் ஜம்போ விமானத்தின் வலதுபுற 'லேண்டிங் கியர்கள்' சரிவர இயங்காததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்து இன்று தான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லேண்டிங் கியர்களில் ஏற்படும் தொழிற்நுட்ப கோளாறுகள் குறித்து தனது காட்டமான அதிருப்தியை ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு எமிரேட்ஸ் விமான நிர்வாக தலைவர் டிம் கிளார்க் தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்கும் சமயத்தில் வலது பக்க லேண்டிங் கியர்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக விமான கம்ப்யூட்டர் சிஸ்டம் எச்சரித்ததையடுத்து மாற்று வழிகளில் பழுதடைந்த கியர்களை இயக்க முயற்சி செய்து அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. ஒருவழியாக மெயின் கியர் மற்றும் விமானத்தின் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள கியர்களை மட்டுமே இயக்கி விமானத்தை பெரும் சிரமங்களுக்கிடையே வெற்றிகரமாக தரையிறக்கி பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர்.

இந்த சூப்பர் ஜம்போ A380 ரக ஏர்பஸ் விமானம் மொத்தம் 391 டன் எடையுடன் வயிற்றுப்பகுதியில் 2 ஜோடி சக்கரங்கள் மற்றும் மூக்குப்பகுதியில் 1 ஜோடி சக்கரங்கள் உட்பட மொத்தம் 22 லேண்டிங் கியர் சக்கரங்களில் இயங்குகிறது.

Source: 7 Days
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.