.

Pages

Tuesday, November 22, 2016

துபாயில் நடந்த யுசிமாஸ் மனக்கணித போட்டியில் தமிழக மாணவர்களுக்கு பரிசு !

துபாய் :நவ-22
துபாயில் நடந்த யுசிமாஸ் மனக்கணித போட்டியில் தமிழக மாணவர்கள் பரிசுகளை பெற்றனர்.

துபாயில் 21-வது சர்வதேச மனக்கணித போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்து பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து மட்டும் மொத்தம் 444 பேர் கலந்து கொண்டனர்.

பல்வேறு நிலைகளில் போட்டி நடைபெற்றது. போட்டியினை யுசிமாஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாக்டர் டினோ விங் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இருந்து யுசிமாஸ் மனக்கணித நிறுவனத்தின் அதிகாரி சென்னையைச் சேர்ந்த அப்ரார் அகமது தலைமையில் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

ஒரு சில பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பரிசினை பெற்றனர். இ பிரிவில் செங்கல்பட்டைச் சேர்ந்த அக்சய், சாசங் குமார் இரண்டாம் பரிசையும், கவுதம் ராவ், மேட்டுப்பாளையம் பிரணவ் சந்தர் ஆகியோர் மூன்றாம் பரிசையும், ஜெ பிரிவில் வேலூர் சத்துவாச்சேரி தீபன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

சி பிரிவில் செங்கல்பட்டின் ஸ்ரீநிதி இரண்டாம் பரிசையும், கொளத்தூர் திவ்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர். ஜி பிரிவில் தூத்துக்குடி தக்னேஷ்வர் பொற்கோ மாரியப்பன் மூன்றாம் பரிசை பெற்றார். அவர்களுக்கு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், துணைத் தூதர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.