அதிரை நியூஸ்: ஜன. 29
ஜனவரி 31 தேதி புதன்கிழமை அன்று அரிய 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா சந்திர கிரகணம்' அரபு நாடுகள் பகுதியில் பார்க்கலாம்
எதிர்வரும் 2018 ஜனவரி 31 ஆம் தேதி இரவில் 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 3 முக்கிய நிகழ்வுகள் ஒருங்கே நிகழும் 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா சந்திர கிரகணம்' நிகழவிருக்கின்றது.
இந்த அதிசய அரிய நிகழ்வை வட அமெரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகள், ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு (அரபு நாடுகள்), ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணக் கிடைக்கலாம். இதுவோர் வானியல் அதிசயம் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
1. ஒரே மாதத்தில் 2 பௌர்ணமிகள் வருவது பொதுவாக 2 வருடங்கள் 8 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும். இதற்கே நீல நிலா என பெயர்.
2. சூப்பர் மூன் எனப்படுவது பூமியின் சுற்றுப்பாதைக்கு 14 சதவிகிதம் நெருங்கி வருவதுடன், 30 சதவிகிதம் கூடுதல் வெளிச்சத்துடனும் இலங்கும். இந்த அரிய நிகழ்வும் சமீப மாதங்களில் மூன்றாவது முறையாக நிகழவுள்ளது.
3. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை நேர்கோடுகளில் வருவதால் ஏற்படுவது சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தின் போது நிலா சிவந்து காணப்படும். இந்த முறை சந்திர கிரகணம் சுமார் 1 மணிநேரம் 16 நிமிடங்கள் நீடிக்கும்.
3 பெரும் நிகழ்வுகள் இணைந்து நிகழும் இந்த அரிய 'சூப்பர் சிவப்பு, நீல நிற சந்திர கிரகணம்' எனும் நிகழ்வை எந்தவித புறச்சாதனங்களும் இன்றி நேரடியாக நம் கண்களால் பார்க்கலாம். யுனைடெட் ஸ்டேட்ஸின் (அமெரிக்கா) மேற்குப் பகுதி மற்றும் கனடாவில் அதிகாலை நேரம் உதிக்குமுன்பாக இந்த நிகழ்வை ரசிக்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, ரஷ்யாவின் கிழக்குப் பகுதி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளிலிருந்து சந்திரன் உதிக்கும் சமயத்திலும் இதை பார்க்கலாம்.
இதற்குமுன் இத்தகைய 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா' சந்திர கிரகணங்கள் 1982 டிசம்பர் 30 ஆம் தேதியும், 1844 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியும், 1866 மார்ச் 31 ஆம் தேதியும் நடைபெற்றுள்ளன.
சந்திர கிரகணங்கள் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திர கிரகண சமயத்தில் சூப்பர் மூன் இணைந்து நிகழ்ந்தது. சூப்பர் மூன்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 4 முதல் 6 முறை வரை நடைபெறும். அடுத்த சூப்பர் மூன் சந்திர கிரகணம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி நிகழும் என்றாலும் அன்றைய தினம் நீல நிலா நிகழ்வு நடைபெறாது.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
ஜனவரி 31 தேதி புதன்கிழமை அன்று அரிய 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா சந்திர கிரகணம்' அரபு நாடுகள் பகுதியில் பார்க்கலாம்
எதிர்வரும் 2018 ஜனவரி 31 ஆம் தேதி இரவில் 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 3 முக்கிய நிகழ்வுகள் ஒருங்கே நிகழும் 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா சந்திர கிரகணம்' நிகழவிருக்கின்றது.
இந்த அதிசய அரிய நிகழ்வை வட அமெரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகள், ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு (அரபு நாடுகள்), ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணக் கிடைக்கலாம். இதுவோர் வானியல் அதிசயம் என வர்ணிக்கப்பட்டுள்ளது.
1. ஒரே மாதத்தில் 2 பௌர்ணமிகள் வருவது பொதுவாக 2 வருடங்கள் 8 மாதங்களுக்கு ஒரு முறை நிகழும். இதற்கே நீல நிலா என பெயர்.
2. சூப்பர் மூன் எனப்படுவது பூமியின் சுற்றுப்பாதைக்கு 14 சதவிகிதம் நெருங்கி வருவதுடன், 30 சதவிகிதம் கூடுதல் வெளிச்சத்துடனும் இலங்கும். இந்த அரிய நிகழ்வும் சமீப மாதங்களில் மூன்றாவது முறையாக நிகழவுள்ளது.
3. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை நேர்கோடுகளில் வருவதால் ஏற்படுவது சந்திர கிரகணம். சந்திர கிரகணத்தின் போது நிலா சிவந்து காணப்படும். இந்த முறை சந்திர கிரகணம் சுமார் 1 மணிநேரம் 16 நிமிடங்கள் நீடிக்கும்.
3 பெரும் நிகழ்வுகள் இணைந்து நிகழும் இந்த அரிய 'சூப்பர் சிவப்பு, நீல நிற சந்திர கிரகணம்' எனும் நிகழ்வை எந்தவித புறச்சாதனங்களும் இன்றி நேரடியாக நம் கண்களால் பார்க்கலாம். யுனைடெட் ஸ்டேட்ஸின் (அமெரிக்கா) மேற்குப் பகுதி மற்றும் கனடாவில் அதிகாலை நேரம் உதிக்குமுன்பாக இந்த நிகழ்வை ரசிக்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா, ரஷ்யாவின் கிழக்குப் பகுதி, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளிலிருந்து சந்திரன் உதிக்கும் சமயத்திலும் இதை பார்க்கலாம்.
இதற்குமுன் இத்தகைய 'சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா' சந்திர கிரகணங்கள் 1982 டிசம்பர் 30 ஆம் தேதியும், 1844 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதியும், 1866 மார்ச் 31 ஆம் தேதியும் நடைபெற்றுள்ளன.
சந்திர கிரகணங்கள் ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும், கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திர கிரகண சமயத்தில் சூப்பர் மூன் இணைந்து நிகழ்ந்தது. சூப்பர் மூன்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 4 முதல் 6 முறை வரை நடைபெறும். அடுத்த சூப்பர் மூன் சந்திர கிரகணம் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி நிகழும் என்றாலும் அன்றைய தினம் நீல நிலா நிகழ்வு நடைபெறாது.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.