அதிரை நியூஸ்: ஜன. 31
10 ஆம் வகுப்பு படிக்காதவர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாதவர்கள் என இந்தியர்களை சமூக, பொருளாதார பிரிவுகளின் கீழ் தனியாக பிரித்து தற்போது நடைமுறையிலுள்ள கரும் நீல வண்ண பாஸ்போர்டிற்கு பதிலாக அவர்களுக்கு என ஆரஞ்சு (காவி) நிறத்தில் தனி பாஸ்போர்ட் வழங்கவும், பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் தற்போது வரை அச்சிடப்பட்டு வரும் பெற்றோர் மற்றும் அட்ரஸ் குறித்த விபரங்களை ஒட்டு மொத்தமாக தூக்கிக் கடாசவும் திட்டமிட்டது இந்திய மத்திய அரசு.
இந்தியர் என்பதற்கான முகவரி சான்றாக பயன்படும் கடைசி பக்க நீக்கம் மற்றும் இந்தியர்கள் மத்தியில் சமூக, பொருளாதார அடிப்படையில் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கும் தனி நிற பாஸ்போர்ட் திட்டம் மற்றும் கட்டாய குடியகல்வு சான்றுகள் (ECR / ECNR) ஆகியவை பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய பாஸ்போர்ட் கொள்கைகளை எதிர்க்கும் பொதுநல வழக்கு ஒன்று கேரள மாநில உயர்நீதி மன்றத்தில் ஷாஜஹான் என்கிற 10 வது படிக்காத நபர் ஒருவரின் சார்பாக அமீரகத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ஷம்சுதீன் கருணாகப்பள்ளி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டமை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது.
இதனையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ராவிஷ்குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தற்போது பாஸ்போர்ட் நிறத்தை மாற்றும் திட்டமில்லை என்றும் அதேபோல் முகவரி அடங்கிய கடைசி பக்கத்தையும் நீக்கப்பட மாட்டாது எனவும் தற்போதுள்ள நடைமுறைகளின் படியே மாற்றங்களின் இன்றி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
10 ஆம் வகுப்பு படிக்காதவர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாதவர்கள் என இந்தியர்களை சமூக, பொருளாதார பிரிவுகளின் கீழ் தனியாக பிரித்து தற்போது நடைமுறையிலுள்ள கரும் நீல வண்ண பாஸ்போர்டிற்கு பதிலாக அவர்களுக்கு என ஆரஞ்சு (காவி) நிறத்தில் தனி பாஸ்போர்ட் வழங்கவும், பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் தற்போது வரை அச்சிடப்பட்டு வரும் பெற்றோர் மற்றும் அட்ரஸ் குறித்த விபரங்களை ஒட்டு மொத்தமாக தூக்கிக் கடாசவும் திட்டமிட்டது இந்திய மத்திய அரசு.
இந்தியர் என்பதற்கான முகவரி சான்றாக பயன்படும் கடைசி பக்க நீக்கம் மற்றும் இந்தியர்கள் மத்தியில் சமூக, பொருளாதார அடிப்படையில் ஏற்றதாழ்வுகளை கற்பிக்கும் தனி நிற பாஸ்போர்ட் திட்டம் மற்றும் கட்டாய குடியகல்வு சான்றுகள் (ECR / ECNR) ஆகியவை பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய பாஸ்போர்ட் கொள்கைகளை எதிர்க்கும் பொதுநல வழக்கு ஒன்று கேரள மாநில உயர்நீதி மன்றத்தில் ஷாஜஹான் என்கிற 10 வது படிக்காத நபர் ஒருவரின் சார்பாக அமீரகத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் ஷம்சுதீன் கருணாகப்பள்ளி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டமை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டது.
இதனையடுத்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ராவிஷ்குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தற்போது பாஸ்போர்ட் நிறத்தை மாற்றும் திட்டமில்லை என்றும் அதேபோல் முகவரி அடங்கிய கடைசி பக்கத்தையும் நீக்கப்பட மாட்டாது எனவும் தற்போதுள்ள நடைமுறைகளின் படியே மாற்றங்களின் இன்றி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.