அதிரை நியூஸ்: ஜன.23
அமீரகத்தில் அபுதாபி பட்டத்து இளவரசரிடம் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு நெகிழ்ச்சியான பிரியாவிடை
1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ராணுவப் படைகளின் துணை கமான்டருமான ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் அலுவலகத்தில் 40 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணியாற்றிய குஞ்சு மொய்தீன் என்ற 63 வயது இந்தியருக்கு சிறப்பான. நெகிழ்ச்சியான பிரியாவிடையை வழங்கினார் ஷேக் முஹமது அவர்கள்.
எதிர்வரும் 31.01.2018 அன்றுடன் பணி ஓய்வு பெற்று பிப்ரவரி 15 ஆம் தேதி தாயகம் திரும்பவுள்ள இந்த எளிய மனிதரின் தோள் மீது கை போட்டு வாழ்த்தியதுடன், மனைவி மக்களின் சுகங்களைப் பற்றி விசாரித்தும், அமீரகம் உன்னுடைய 2 வது தாய் நாடு நீ விருப்பப்படும் போதெல்லாம் இங்கு வரலாம் என அனுமதியும் தந்து, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார் பட்டத்து இளவரசர்.
இந்த இன்ப அதிர்ச்சியை பற்றி கூறும் குஞ்சு மொய்தீன், மெய் மறந்தேன் எனினும் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது அவர்களின் தினசரி நடவடிக்கைகளை அருகிலிருந்து 40 ஆண்டுகளாக பார்த்தவன் என்கிற முறையில் அவர்களின் சிறப்பான தன்னிகரில்லா நற்குணங்களை இதற்கும் அதிகமாக பார்த்துள்ளேன். மேலும் எங்களுடைய பணிக்காலத்தில் எங்களைப் போன்ற சாதாரண ஊழியர்களின் நலன்களையும் குடும்பத்தைப் பற்றியும் அவ்வப்போது அன்போடு விசாரிப்பார்கள் என உவந்து கூறினார்.
இந்த அரிய நிகழ்வை பற்றி அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அவர்களும் போற்றி புகழ்ந்துள்ளார். அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது அது குஞ்சு மொய்தீன் போன்ற சாதாரண ஊழியர்களாகட்டும் அல்லது யூசுப் அலி எம்.ஏ, பி.ஆர். ஷெட்டி போன்ற பெரும் வணிகர்களாகட்டும் ஒவ்வொருவரும் தங்களால் ஆன உழைப்பை இந்நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியுள்ளனர், இவர்களைப் போன்றவர்களுக்கு மிக உயரிய இடங்களிலிருந்து வரும் அங்கீகாரங்கள் மகத்தானவை என்றும் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் அபுதாபி பட்டத்து இளவரசரிடம் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு நெகிழ்ச்சியான பிரியாவிடை
1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ராணுவப் படைகளின் துணை கமான்டருமான ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்களின் அலுவலகத்தில் 40 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணியாற்றிய குஞ்சு மொய்தீன் என்ற 63 வயது இந்தியருக்கு சிறப்பான. நெகிழ்ச்சியான பிரியாவிடையை வழங்கினார் ஷேக் முஹமது அவர்கள்.
எதிர்வரும் 31.01.2018 அன்றுடன் பணி ஓய்வு பெற்று பிப்ரவரி 15 ஆம் தேதி தாயகம் திரும்பவுள்ள இந்த எளிய மனிதரின் தோள் மீது கை போட்டு வாழ்த்தியதுடன், மனைவி மக்களின் சுகங்களைப் பற்றி விசாரித்தும், அமீரகம் உன்னுடைய 2 வது தாய் நாடு நீ விருப்பப்படும் போதெல்லாம் இங்கு வரலாம் என அனுமதியும் தந்து, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார் பட்டத்து இளவரசர்.
இந்த இன்ப அதிர்ச்சியை பற்றி கூறும் குஞ்சு மொய்தீன், மெய் மறந்தேன் எனினும் பட்டத்து இளவரசர் ஷேக் முஹமது அவர்களின் தினசரி நடவடிக்கைகளை அருகிலிருந்து 40 ஆண்டுகளாக பார்த்தவன் என்கிற முறையில் அவர்களின் சிறப்பான தன்னிகரில்லா நற்குணங்களை இதற்கும் அதிகமாக பார்த்துள்ளேன். மேலும் எங்களுடைய பணிக்காலத்தில் எங்களைப் போன்ற சாதாரண ஊழியர்களின் நலன்களையும் குடும்பத்தைப் பற்றியும் அவ்வப்போது அன்போடு விசாரிப்பார்கள் என உவந்து கூறினார்.
இந்த அரிய நிகழ்வை பற்றி அமீரகத்திற்கான இந்தியத் தூதர் நவ்தீப் சிங் சூரி அவர்களும் போற்றி புகழ்ந்துள்ளார். அமீரகத்தின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது அது குஞ்சு மொய்தீன் போன்ற சாதாரண ஊழியர்களாகட்டும் அல்லது யூசுப் அலி எம்.ஏ, பி.ஆர். ஷெட்டி போன்ற பெரும் வணிகர்களாகட்டும் ஒவ்வொருவரும் தங்களால் ஆன உழைப்பை இந்நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியுள்ளனர், இவர்களைப் போன்றவர்களுக்கு மிக உயரிய இடங்களிலிருந்து வரும் அங்கீகாரங்கள் மகத்தானவை என்றும் தெரிவித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.