.

Pages

Tuesday, January 30, 2018

மதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் மௌலான தோப்பில் ஆறு குடிசை வீடுகள் இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துவிட்டது. பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு தீ விபத்து நிவாரண உதவித் தொகையாக தமிழக அரசு தலா ரூ.5000மும், ஒரு செட் வேட்டி சேலையும், 5 கிலோ அரிசியும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும், சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட 1) புஷ்பலதா, க.பெ.ராஜ், 2) கவிதா க.பெ.காசி, 3) கார்த்திகா, க.பெ. ரகுபதி, 4) லோகாம்பாள், க.பெ.பாஸ்கர், 5) சம்சுதீன், த.பெ. அப்துல் மஜிது, 6) காவேரி, க.பெ. பெரமையன் ஆகிய  6 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5000மும், மொத்தம் ரூ.30,000மும், 2 செட் வேட்டி சேலையும் வழங்கினார்.  பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் தனது சொந்த நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட 6 நபர்களுளின் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.12,000மும் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட 6 நபர்களின் குடும்பங்களுக்கு வருமானச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, போன்ற சான்றிதழ்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மதுக்கூர் கூட்டுறவு பால்வள தலைவர் துரைசெந்தில், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்ரமணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குருசேவ், பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாரதி, பட்டுக்கோட்டை முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் சுபராஜேந்திரன், கார்த்திகேயன், வட்டாட்சியர்கள் ரகுராமன், ஏ.பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.