.

Pages

Thursday, January 25, 2018

அதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்திய குடியரசு தினத்தை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ அறிவுறுத்தல்!

அதிராம்பட்டினம், ஜன.25
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு பேசியது;
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 27ந்தேதி மாவட்டத் தலைநகரங்களில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டதிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்து, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் அனைவரும் நாட்டின் 69 வது இந்திய குடியரசு தின விழாவை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ வேண்டும். இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களை அற்பணித்த தியாகிகளின் தியாகங்களை நினைவு கூற வேண்டும்' என்றார்.

முன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ. சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இக்கூட்டத்தில், அதிரை பேரூர் துணைச் செயலர் அபு பக்கர்,  சாகுல் ஹமீது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.