.

Pages

Sunday, January 21, 2018

பட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜன.21
பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர் முத்து. உத்திராபதி தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் சி.பக்கிரி சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வா. பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ஏ.எம் மார்க்ஸ், அதிராம்பட்டினம் பேரூர் செயலர் என்.காளிதாஸ், ஹாஜா முகைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.