பேராவூரணி ஜன.22
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக தொகுதிக்கழகம் சார்பில் பேராவூரணி காந்தி பூங்கா அருகில் ஞாயிறு மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் குழ.சுந்தர்ராஜன் வரவேற்றார். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், "அண்ணா தலைமையில் திமுக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, எம்ஜிஆர் தேர்தல் நிதியாக ரூ 10 இலட்சம் வழங்க முன்வந்தபோது, அதனை வாங்க மறுத்த அண்ணா, "கூட்டத்திற்கு வந்து உன் முகத்தை காட்டு. 30 இலட்சம் வாக்குகள் கிடைக்கும்" என்றார். அத்தகைய பெருமைக்குரியவர் எம்ஜிஆர். 280 கோடிக்கு அண்ணா காலத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இன்றைக்கு 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.
ரூபாய்க்கு ஒருபடி அரிசித்திட்டத்தை அண்ணா நிறைவேற்ற முடியாத போது, மறைந்த ஜெயலலிதா மாதம் 30 கிலோ இலவச அரிசித்திட்டம் தந்தார். கருணாநிதி நிறைவேற்ற முடியாத வீராணம் திட்டத்தை, புதிய வீராணம் திட்டம் என நிறைவேற்றினார். தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதால் தான், மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது. பின்தங்கிய மாநிலமாக இருப்பதால் உ.பி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறது. தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது.
செஞ்சிக்கோட்டையில் ஏறியவன் எல்லாம் ராஜா தேசிங்கு ஆகி விட முடியாது. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகிவிட முடியாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்து விட்டே அரசியலுக்கு வரவேண்டும். திடீரென அரசியலுக்கு வருவேன். முதலமைச்சர் ஆவேன் என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுக யாருடைய, எந்த தனி நபருடைய, எந்த குடும்பத்தாருடைய சொத்தும் கிடையாது. இது தொண்டர்களின் கட்சி" இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை மதியழகன் ஆகியோர் பேசினர். நிறைவாக பேராவூரணி ஒன்றியச்செயலாளர் உ.துரைமாணிக்கம் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், நிர்வாகிகள் குழ.செ.அருள்நம்பி, பி.ராமமூர்த்தி, எம்.சுந்தர்ராஜன், பால் ஏ.பக்கர், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 101-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக தொகுதிக்கழகம் சார்பில் பேராவூரணி காந்தி பூங்கா அருகில் ஞாயிறு மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் குழ.சுந்தர்ராஜன் வரவேற்றார். இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசுகையில், "அண்ணா தலைமையில் திமுக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, எம்ஜிஆர் தேர்தல் நிதியாக ரூ 10 இலட்சம் வழங்க முன்வந்தபோது, அதனை வாங்க மறுத்த அண்ணா, "கூட்டத்திற்கு வந்து உன் முகத்தை காட்டு. 30 இலட்சம் வாக்குகள் கிடைக்கும்" என்றார். அத்தகைய பெருமைக்குரியவர் எம்ஜிஆர். 280 கோடிக்கு அண்ணா காலத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இன்றைக்கு 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்.
ரூபாய்க்கு ஒருபடி அரிசித்திட்டத்தை அண்ணா நிறைவேற்ற முடியாத போது, மறைந்த ஜெயலலிதா மாதம் 30 கிலோ இலவச அரிசித்திட்டம் தந்தார். கருணாநிதி நிறைவேற்ற முடியாத வீராணம் திட்டத்தை, புதிய வீராணம் திட்டம் என நிறைவேற்றினார். தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னிலையில் இருப்பதால் தான், மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுக்கிறது. பின்தங்கிய மாநிலமாக இருப்பதால் உ.பி, பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறது. தமிழகம் முன்னேறிய மாநிலமாக உள்ளது.
செஞ்சிக்கோட்டையில் ஏறியவன் எல்லாம் ராஜா தேசிங்கு ஆகி விட முடியாது. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகிவிட முடியாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களுக்கு சேவை செய்து விட்டே அரசியலுக்கு வரவேண்டும். திடீரென அரசியலுக்கு வருவேன். முதலமைச்சர் ஆவேன் என்றால் மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுக யாருடைய, எந்த தனி நபருடைய, எந்த குடும்பத்தாருடைய சொத்தும் கிடையாது. இது தொண்டர்களின் கட்சி" இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.ஜெயபால், தலைமைக்கழக பேச்சாளர் தஞ்சை மதியழகன் ஆகியோர் பேசினர். நிறைவாக பேராவூரணி ஒன்றியச்செயலாளர் உ.துரைமாணிக்கம் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில், மாநில கயறு வாரியத்தலைவர் எஸ்.நீலகண்டன், நிர்வாகிகள் குழ.செ.அருள்நம்பி, பி.ராமமூர்த்தி, எம்.சுந்தர்ராஜன், பால் ஏ.பக்கர், ஆர்.பி.ராஜேந்திரன், எஸ்.எம்.நீலகண்டன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.