தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (30.01.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர், புதிய தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அனைத்து வங்கியாளர்களும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனுக்குடன் தீர்வு கண்டு கடனுதவி வழங்கிடவும், சுய தொழில் முனைவோர் வளர உதவி செய்ய வேண்டுமெனவும், நமது மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட மானியத் தொகையினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட வேண்டிய இலக்கீடு முழுமையாக எட்டும் வகையில் அனைத்து வங்கிகளும் செயல்படவேண்டும். நமது மாவட்டத்;தில் ரூ.333 கோடி ஒதுக்கப்பட்டள்ளது. அதில் இதுவரை ரூ.192.83 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவிலான குழுக்களின் கட்டமைப்பிற்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட பெரும் கடன் நிலுவைகள் விரைவாக வழங்கிட வேண்டும். அதை போல் வங்கிகள் தோறும் அமைக்கப்பட வேண்டிய சமுதாய அளவிலான கடன் திருப்பித்தல் குழு கூட்டம் (CBRM – Community Based Recovery Mechanism) மாதந்தோறும் நடத்திட வேண்டும். தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி நபர் கடன் மகளிர் குழுக்களுக்கான கடன், தொழிற்கடன், நேரடி கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு தனி நபர் கடன் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், குழுக்கடன் அதிகபட்சமாக ரூ.10 இலட்சமும் வழங்கிடலாம்.
மேலும், முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கு மாதாமாதம் அரசு வழங்கும் உதவித்தொகைகள் தாமதமின்றி தடையில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் தியாகராஜன், நபார்டு வங்கி துணை மண்டல மேலாளர் சுப்ரமணியன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் தியாகராஜன், வேளாண் துறை துணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜஸ்டின், இந்தியன் வங்கி, பாரத வங்கி, இந்தியன் ஓவர்சீங் வங்கி, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர், புதிய தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அனைத்து வங்கியாளர்களும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனுக்குடன் தீர்வு கண்டு கடனுதவி வழங்கிடவும், சுய தொழில் முனைவோர் வளர உதவி செய்ய வேண்டுமெனவும், நமது மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட மானியத் தொகையினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட வேண்டிய இலக்கீடு முழுமையாக எட்டும் வகையில் அனைத்து வங்கிகளும் செயல்படவேண்டும். நமது மாவட்டத்;தில் ரூ.333 கோடி ஒதுக்கப்பட்டள்ளது. அதில் இதுவரை ரூ.192.83 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி அளவிலான குழுக்களின் கட்டமைப்பிற்கு வங்கிகள் மூலம் வழங்கப்பட பெரும் கடன் நிலுவைகள் விரைவாக வழங்கிட வேண்டும். அதை போல் வங்கிகள் தோறும் அமைக்கப்பட வேண்டிய சமுதாய அளவிலான கடன் திருப்பித்தல் குழு கூட்டம் (CBRM – Community Based Recovery Mechanism) மாதந்தோறும் நடத்திட வேண்டும். தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி நபர் கடன் மகளிர் குழுக்களுக்கான கடன், தொழிற்கடன், நேரடி கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு தனி நபர் கடன் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், குழுக்கடன் அதிகபட்சமாக ரூ.10 இலட்சமும் வழங்கிடலாம்.
மேலும், முதியோர் உதவித்தொகை பெறும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆகியோர்களுக்கு மாதாமாதம் அரசு வழங்கும் உதவித்தொகைகள் தாமதமின்றி தடையில்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என வங்கியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் தியாகராஜன், நபார்டு வங்கி துணை மண்டல மேலாளர் சுப்ரமணியன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் தியாகராஜன், வேளாண் துறை துணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜஸ்டின், இந்தியன் வங்கி, பாரத வங்கி, இந்தியன் ஓவர்சீங் வங்கி, கனரா வங்கி, சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகளின் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.