அதிரை நியூஸ்: ஜன.27
ஓமனின் ஆதம் மாகாணத்தின் அல் மத்மார் பிரதேசத்தில் ஓமன் கலாச்சாரத் துறையும் பிரான்ஸின் ஸப்போர்ன் பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈட்டி முனைகள், 10 பாம்பு சிலைகள், 2 தாழிகள் மற்றும் ஏராளமான உடைந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் இரும்புகால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள இயலும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இதே பகுதியில் பித்தளை மற்றும் வெங்கலத்தால் செய்யப்பட்ட ஆயுதங்களும் கிடைத்துள்ளன, இவை 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
கடந்த வாரம் சஹம் மாகாணத்தின் வடக்கு அல் பதீனா பகுதியில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சுமார் 2,500 கி.பி முதல் 2,000 கி.பி காலத்தை சேர்ந்த 5 குடியிருப்பு பகுதிகளும், கல்லறைகளும் தோண்டியெடுக்கப்பட்டன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
ஓமனின் ஆதம் மாகாணத்தின் அல் மத்மார் பிரதேசத்தில் ஓமன் கலாச்சாரத் துறையும் பிரான்ஸின் ஸப்போர்ன் பல்கலைகழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈட்டி முனைகள், 10 பாம்பு சிலைகள், 2 தாழிகள் மற்றும் ஏராளமான உடைந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் இரும்புகால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள இயலும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இதே பகுதியில் பித்தளை மற்றும் வெங்கலத்தால் செய்யப்பட்ட ஆயுதங்களும் கிடைத்துள்ளன, இவை 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
கடந்த வாரம் சஹம் மாகாணத்தின் வடக்கு அல் பதீனா பகுதியில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சுமார் 2,500 கி.பி முதல் 2,000 கி.பி காலத்தை சேர்ந்த 5 குடியிருப்பு பகுதிகளும், கல்லறைகளும் தோண்டியெடுக்கப்பட்டன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.