இந்தியாவின் 69 வது குடியரசு தின் விழா நாடெங்கிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அதிராம்பட்டினம் பேரூர் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எஸ்.எம் முஹம்மது முகைதீன் தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் சேர்மன் வாடி ஆகிய இடங்களில் துணைத் தலைவர் நாராயணசாமி, செயலாளர் அதிரை பாருக் ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன் இனிப்பு வழங்கினார்.
விழாவில், காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள்ஏ கோவிந்தன், எஸ்.எஸ் காசிம், ஏரிப்புறக்கரை எம்.ஆர் ராஜேந்திரன், பி.திலகராஜ் கட்டபொம்மன், எஸ். சம்பத், எம்.ராஜேந்திரன், எஸ்.சேக்தாவூது, கே.எம் முகமது நெய்னாமலை, கே.ராஜா உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.