.

Pages

Tuesday, January 23, 2018

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

கோப்புப்படம்
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 53 வது மாதாந்திர கூட்டம் கடந்த 12/01/2018 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்  :  அப்துல் ஹமீது இக்பால் ( உறுப்பினர் )
முன்னிலை  : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
சிறப்புரை : A.சாதிக் அகமது ( இணை தலைவர்
அறிக்கை வாசித்தல் : அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை  :  A. அபூபக்கர் ( பொருளாளர் )

தீர்மானங்கள்:
1) நகை கடன், ஆம்புலன்ஸ், மம்மி பாக்ஸ் போன்ற சேவைகளை செய்துவரும் ABM தலைமையகம் எவ்வித குறையின்றியும் மேலும் செம்மையாக செயல்படுத்தி திறம்பட பணியை ஆற்றிடுமாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும், நகை கடன் விசயமாக அவசர தேவையின் நோக்கத்தை உணர்ந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கேட்கக்கூடிய நபர்களின் முன் அறிவிப்பினை தெரிவிப்பது விசயமாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

2) இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2018-ல் பென்ஷனுக்கான தொகை பங்களிப்பு செய்ய முன் வந்த அதிரை வாசிகள் அனைவருக்கும் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3)  RECOVERING DEPOSIT (RD) விசயமாக நினைவூட்டப்பட்டு அதில் முடிந்தளவு சிறு தொகையை செலுத்தி விடுமுறை நாட்களில் ஊர் செல்லும் போது ABM -ன் தலைமையக்கத்திலிருந்து  திருப்பி பெறுவது விசயமாக ஊக்குவிக்கப்பட்டு அதனை  கொண்டு பயன் பெரும் மகத்துவத்தை பற்றி கலந்து ஆலோசித்து ஆர்வமூட்டப்பட்டது.

4) ABM-க்கு  முழு ஆதரவும் பொருளாதார உதவியும் ஒத்துழைப்பும் தந்து உதவும் ஜித்தாவிலுள்ள AYDA கிளையின் 25 வது வருட கூட்டம் அடுத்தமாதம் செம்மையாக நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் FEBRUARY 2018 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.