.

Pages

Wednesday, January 31, 2018

உலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம்!

அதிரை நியூஸ்: ஜன.31
புதிய ஆய்வறிக்கையின்படி, கடந்த 2017 ஆம் ஆண்டில் 8,230 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருவாய் ஈட்டியதன் மூலம் இந்தியா உலகளவில் பொருளாதார வளமுள்ள 6-வது  பணக்கார நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது (சில பணக்காரர்களின் நாடு என்பதை தான் பணக்கார நாடு என்று புரிந்து இருப்பார்கள் போல). இந்த ஆய்வை New Wold Wealth என்ற நிறுவனம் நடத்தியுள்ளது.

உலகளாவிய செல்வச் செழிப்பு மற்றும் சந்தை ஆராய்ச்சிகளுக்கான நிறுவனமான New Wold Wealth, a global wealth intelligence and market research company வெளியிட்டுள்ள கருத்துப்படி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களை விட இந்தியர்கள் அதிகம் சொத்து சேர்த்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சொத்துக்கள் 2016 ஆம் ஆண்டிலிருந்த 6,584 பில்லியன் டாலர் அளவிலிருந்து 25 சதவிகிதம் கூடுதலாக அதிகரித்துள்ளதால் 8,230 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாம். அதாவது 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான கடந்த பத்தாண்டுகளில் 160 சதவிகிதம் கூடுதல் வளர்ச்சி கண்டுள்ளதாம் அதேவேளை சீனா 198 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகின் முதல் 10 இடங்கள் வகிக்கும் பணக்கார நாடுகளின் பட்டியல்:
10 wealthiest countries in the world by total wealth held, 2017

1. United States: $62,584 billion
2. China: 24,803 billion
3. Japan $19,522 billion
4. United Kingdom: $9,919 billion
5. Germany: $9,660 billion
6. India: $8,230 billion
7. France: $6,649 billion
8. Canada: $6,393 billion
9. Australia: $6,142 billio
10. Italy: $4,276 billion

குறிப்பு: 
இதுபோன்ற ஆளும் தரப்புக்கு ஆதரவான ஆய்வுகள் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சமயம் வரை அடிக்கடி பன்னாட்டு ஆய்வு நிறுவனங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் அடிக்கடி வரக்கூடும். 

இந்தியா பணக்கார நாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும் பொதுமக்களுக்குப் பயன்படாத அந்தப் பணங்கள் யாரிடம் பதுங்கியுள்ளது என்பதும் சாதாரண இந்தியர்களுக்கும் தெரிந்ததே.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.