.

Pages

Tuesday, January 23, 2018

டிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்த பெண்!

அதிரை நியூஸ்: ஜன.23
அமெரிக்கா கூறிக்கொள்வது போல் அது ஒன்றும் பாதுகாப்பு அம்சங்களில் சிறந்த நாடு இல்லை என 66 வயது வீடில்லாமல் தெரு ஓரத்தில் வாழும் ஒரு வயதான பெண் நிரூபித்துள்ளார் ஆனால் பிற உலக நாடுகளிலிருந்து லாப்டாப் கொண்டு வராதே, இதைக் கொண்டு வராதே! அதைக் கொண்டு வராதே! பாதுகாப்புச் சோதனைகளை இன்னும் அதிகப்படுத்து என அக்கப்போர் செய்வதில் மட்டும் எந்த குறைச்சலும் இல்லை.

சிகாகோவின் ஓ' ஹரே சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Chicago's O'Hare International Airport) லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்திற்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி பறந்து வந்த 66 வயது மாரிலின் ஹார்ட்மென் (Marilyn Hartman) எனும் பெண் ஒருவழியாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானப் பணியாளர்களால் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்குமுன் கண்டு பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கே திருப்பியனுப்பப்பட்டார்.

இந்தப் பெண் இப்படி வருவது இது முதன்முறையல்ல 8வது முறையென புள்ளிவிபரங்கள் வேறு தருகின்றனர் அமெரிக்க அதிகாரிகள். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையான ஒரு சில மணிநேரத்திலேயே இதே சிகாகோ விமான நிலையத்தில் இதேபோல் ஊடுருவிச் செல்ல முயன்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் 2 வருடங்கள் மனநல மருத்துவமனையிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 24 மணிநேரங்கள் அந்த ஏர்போர்டிலேயே காத்திருந்து சரியான சந்தர்ப்பம் கிடைத்தபோது கூட்டத்தோடு கூட்டமாக விமான நிலைய பாதுகாப்புக்களை கடந்து விமானம் ஏறியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்தப் பெண் மீது திருட்டு, சட்ட விரோதமாக ஊடுருவி செல்லுதல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Source: Khaleej Times Web Report / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.