அதிராம்பட்டினம், ஜன.29
பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (ஜன.29) தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.
திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், 55 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (ஜன.29) தமிழகமெங்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஈடுபட்டனர்.
திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K.செல்வம், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எஸ்.கே கார்த்திகேயன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம். சாகுல் ஹமீது, மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிரை பேரூர் செயலர் என்.காளிதாஸ் உட்பட அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். இதில், 55 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.