பட்டுக்கோட்டை ஜன.28-
பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், மாணவர் சங்க நிர்வாகிகள் அரவிந்தசாமி, சசிகுமார் மற்றும் உள்ள தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியம் மற்றும் நகரக்கிளை சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுந்தர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்திய தொழிற்சங்க மைய ஒருங்கிணைப்பாளர் என். கந்தசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க தலைவர் கே.செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் எஸ் பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பொருளாளர் வீ.சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நசீர், விவேக், முருக.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் நிறைவுறையாற்றினார். முடிவில் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், ' பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மக்களின் தலையில் நிதிச்சுமையை ஏற்றக்கூடாது' என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வலியுறுத்தல்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், மாணவர் சங்க நிர்வாகிகள் அரவிந்தசாமி, சசிகுமார் மற்றும் உள்ள தோழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் சனிக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றியம் மற்றும் நகரக்கிளை சார்பில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சுந்தர பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளைத் தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்திய தொழிற்சங்க மைய ஒருங்கிணைப்பாளர் என். கந்தசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க தலைவர் கே.செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் எஸ் பாலகிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய பொருளாளர் வீ.சாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நசீர், விவேக், முருக.சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால் நிறைவுறையாற்றினார். முடிவில் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், ' பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மக்களின் தலையில் நிதிச்சுமையை ஏற்றக்கூடாது' என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.