.

Pages

Sunday, January 28, 2018

அதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்  இன்று (ஜன.28) ஞாயிற்றுக்கிழமை 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், மஹல்லா சங்கங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிரை பேருந்து நிலையத்தில் நடந்த முகாமில், அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.பிச்சை கலந்துகொண்டு  குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினார். இம்முகாமில், சுகாதார ஆய்வாளர் எஸ். வெங்கடேஷன், துப்புரவு கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் அரசு ஆரம்ப சுதார நிலைய செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நடந்த முகாமில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் முகமது நவாஸ்கான், பொருளாளர் அகமது மன்சூர் மற்றும் சாகுல் ஹமீது, அய்யாவு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.