அதிரை நியூஸ்: ஜன.22
அமீரகம், ஷார்ஜாவில் தடுக்கப்பட்ட இடங்களில் கிரிக்கெட் விளையாடினால் தலைக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாடினால் பரிசு தருவாங்க பார்த்திருப்போம் ஆனால் ஷார்ஜாவில் பைன் போடுவோம்னு சொன்னாங்க! சொன்ன மாதிரியே செஞ்சுட்டாங்களாம்.
அதாவது ஷார்ஜாவின் சுத்தம், சுகாதார மற்றும் நகரின் அழகை கெடுக்கும் வகையில் தெருவில் குப்பைகள் எறிவது, உங்க வீட்டு பால்கனியில் துணிகளை காயப்போடுவது, பொது புல்வெளிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவோர் ஒவ்வொருவர் மீதும் தலா 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என ஷார்ஜா மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேற்காணும் வகை குற்றங்களை கண்டறிந்து அபராதம் போடுவதற்காகவே 50 ஆய்வாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
பிடிபடுவோரிடமிருந்து அடையாள அட்டைகள் பிடுங்கப்பட்டு அவர்களுக்கு அபராத டிக்கெட் ஒன்று தரப்படும். சம்பந்தப்பட்டவர்கள் ஷார்ஜா மாநகராட்சிக்கு நேரில் ஆஜராகி வாடிக்கையாளர் சேவை மையத்தில் அபராதத்தை கட்டிவிட்டு தங்களுடைய அடையாள அட்டைகளை பெற்றுச் செல்ல வேண்டும். இதே குற்றத்தை மறுபடியும் செய்தால் கூடுதலாக 'இனிமேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன்' என மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் எழுதித் தர வேண்டும்.
ஷார்ஜா அல் தாவூன் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட அதற்கென பல பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன அங்கு தான் விளையாட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி சொல்லியுள்ளது ஷார்ஜா மாநகராட்சி.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகம், ஷார்ஜாவில் தடுக்கப்பட்ட இடங்களில் கிரிக்கெட் விளையாடினால் தலைக்கு 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாடினால் பரிசு தருவாங்க பார்த்திருப்போம் ஆனால் ஷார்ஜாவில் பைன் போடுவோம்னு சொன்னாங்க! சொன்ன மாதிரியே செஞ்சுட்டாங்களாம்.
அதாவது ஷார்ஜாவின் சுத்தம், சுகாதார மற்றும் நகரின் அழகை கெடுக்கும் வகையில் தெருவில் குப்பைகள் எறிவது, உங்க வீட்டு பால்கனியில் துணிகளை காயப்போடுவது, பொது புல்வெளிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடுவோர் ஒவ்வொருவர் மீதும் தலா 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என ஷார்ஜா மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேற்காணும் வகை குற்றங்களை கண்டறிந்து அபராதம் போடுவதற்காகவே 50 ஆய்வாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
பிடிபடுவோரிடமிருந்து அடையாள அட்டைகள் பிடுங்கப்பட்டு அவர்களுக்கு அபராத டிக்கெட் ஒன்று தரப்படும். சம்பந்தப்பட்டவர்கள் ஷார்ஜா மாநகராட்சிக்கு நேரில் ஆஜராகி வாடிக்கையாளர் சேவை மையத்தில் அபராதத்தை கட்டிவிட்டு தங்களுடைய அடையாள அட்டைகளை பெற்றுச் செல்ல வேண்டும். இதே குற்றத்தை மறுபடியும் செய்தால் கூடுதலாக 'இனிமேல் நான் இப்படிச் செய்ய மாட்டேன்' என மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் எழுதித் தர வேண்டும்.
ஷார்ஜா அல் தாவூன் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிருப்தியை அடுத்து கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட அதற்கென பல பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன அங்கு தான் விளையாட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி சொல்லியுள்ளது ஷார்ஜா மாநகராட்சி.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.