அதிரை நியூஸ்: ஜன. 21
சவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகளை இழந்தவருக்கு மன்னர் சல்மான் உதவி
சவுதியின் தென் மேற்கு பிராந்தியத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒரு கனரக டிரக்குடன் கார் மோதிய விபத்தில் சமி பின் முஹமது அல் நைமி என்பாருடைய மனைவி மற்றும் அவரது 6 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர், இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
சமி பின் முஹமது அவர்கள் தனது குடும்பத்தினரின் ஜனாஸாக்கள் முன் அமர்ந்து கதறும் போட்டோ ஒன்று செய்தியுடன் வெளியாகி பார்த்தோரின் உள்ளங்களை தகர்த்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மன்னர் சல்மான் அவர்கள் சமி பின் முஹமது அவர்களுக்கு வீடு ஒன்றையும், கார் ஒன்றையும் மனிதாபிமான அடிப்படையில் வழங்கி அவரை ஆற்றுப்படுத்தியுள்ளார்.
7 பேர் பலியான இந்த சம்பவத்தில் சமி பின் முஹமது அவர்களின் குடும்பத்தில் அவரது இன்னொரு மகன் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மேலும், கார் டிரைவரும் டிரக் டிரைவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த விபத்து மோசமான சாலை பராமரிப்பின் காரணமாகவே ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சாலையில் பெரும் பாறாங்கற்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளாலேயே சாலைகள் பழுதடைகின்றதாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகளை இழந்தவருக்கு மன்னர் சல்மான் உதவி
சவுதியின் தென் மேற்கு பிராந்தியத்தில் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒரு கனரக டிரக்குடன் கார் மோதிய விபத்தில் சமி பின் முஹமது அல் நைமி என்பாருடைய மனைவி மற்றும் அவரது 6 குழந்தைகள் என மொத்தம் 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர், இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
சமி பின் முஹமது அவர்கள் தனது குடும்பத்தினரின் ஜனாஸாக்கள் முன் அமர்ந்து கதறும் போட்டோ ஒன்று செய்தியுடன் வெளியாகி பார்த்தோரின் உள்ளங்களை தகர்த்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மன்னர் சல்மான் அவர்கள் சமி பின் முஹமது அவர்களுக்கு வீடு ஒன்றையும், கார் ஒன்றையும் மனிதாபிமான அடிப்படையில் வழங்கி அவரை ஆற்றுப்படுத்தியுள்ளார்.
7 பேர் பலியான இந்த சம்பவத்தில் சமி பின் முஹமது அவர்களின் குடும்பத்தில் அவரது இன்னொரு மகன் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். மேலும், கார் டிரைவரும் டிரக் டிரைவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த விபத்து மோசமான சாலை பராமரிப்பின் காரணமாகவே ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சாலையில் பெரும் பாறாங்கற்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளாலேயே சாலைகள் பழுதடைகின்றதாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.