.

Pages

Wednesday, January 31, 2018

அபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

அதிராம்பட்டினம், ஜன.31
அபூர்வ முழு சந்திர கிரகணம் தோன்றியதையடுத்து, அதிராம்பட்டினத்தில் சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

நிகழாண்டின் முதல் முழு சந்திர கிரகணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நிகழ்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்றும், திறந்த வெளி மைதானங்களுக்கு சென்றும் முழு சந்திர கிரகணத்தை கண்டு ரசித்தனர். மேலும், அதிராம்பட்டினத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் புதுமனைத் தெரு மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசல், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல், ஆலடித்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், மரைக்காப் பள்ளிவாசல், ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளிவாசல், கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில், இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.