.

Pages

Friday, January 26, 2018

அதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்க குடியரசு தின விழா!

அதிராம்பட்டினம், ஜன.26
இந்தியாவின் 69 வது குடியரசு தின விழா நாடெங்கிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நல சங்க அலுவலகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்த நலச் சங்கத் தலைவர் ஹாஜா ஷெரீப் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில், நலச் சங்க துணைத் தலைவர் சிராஜுதீன், பொதுச்செயலாளர் நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் மன்சூர் அகமது, முன்னாள் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஜெஹபர் சாதிக் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.