.

Pages

Friday, January 26, 2018

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

தஞ்சாவூரில்  குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து
550 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே  3 இலட்சத்து 65 ஆயிரத்து 536 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,  35 காவலர்களுக்கு பதக்கங்களையும், 112 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும்
மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை வழங்கினார்.

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2018)  குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.  பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது  வாரிசுதாரர்களையும் கைத்தறி ஆடை அணிவித்து  மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை காவல் துறை கண்காணிப்பாளர் த.செந்தில்குமார் அவர்களுடன் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.   

இவ்விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறையில் 16 பயனாளிகளுக்கு ரூ.4,25,000 மதிப்பிலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.2,20,000 மதிப்பிலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட 2 பயனாளிகளுக்கு ரூ.11,120 மதிப்பிலும், தாட்கோ மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.1,26,80,672மும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.1,50,750 மதிப்பிலும், பிற்படுடத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.1,19,310 மதிப்பிலும், வருவாய்த்துறை சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூ.35,52,500 மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3,92,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.1,85,000 மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.8,62,496 மதிப்பிலும்,  கூட்டுறவுத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5,90,000 மதிப்பிலும், ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1,90,000 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு ரூ.5,38,688 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.3,28,000 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1,20,000 மதிப்பிலும், ஆக மொத்தம் 550 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 3 இலட்சத்து 65 ஆயிரத்து 536 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மற்றும் மாண்புமிகு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை 35 காவலர்களுக்கு காவலர் பதக்கங்களையும், 112 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும், ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வழங்கினார்.
 
இவ்விழாவில் தஞ்சாவூர் தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, கண்ணந்தங்குடி மேற்கு அரசு உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் தூய வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருபுவனம் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பூண்டி இ.டி.தாமஸ் நினைவு மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம், இந்திய குழந்தைகள் நலக்குழுமம், சாக்கோட்டை மாதா மாற்றுத் திறனாளிகள் பள்ளி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி போன்ற பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 330 மாணவ மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இக்கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

முன்னதாக காவல் துறையின் சார்பில் நாய்களான ராஜராஜன், டஃபி, சீசர் ஆகிய துப்பறியும் நாய்கள்  உயரம் மற்றும் வளையம் தாண்டுதல், நெருப்பு வளையம் தாண்டுதல், மோப்ப திறன் காட்டுதல், சிறப்பு விருந்தினருக்கு வரவேற்பு வணக்கம், நன்றி வணக்கம் செலுத்துதல் போன்ற சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

இவ்விழாவில் தஞ்சாவூர் காவல்துறை துணைத்தலைவர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பயிற்சி துணை ஆட்சியர் ஸ்ரீதேவி, வேளாண் இணை இயக்குநர் மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாசினி, சுகாதாரத் இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர சுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (பொது) செந்தாமரை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சி.மணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரவிச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் டாக்டர்.ராஜ்குமார், முன்னாள் படைவீரர் நல அலுவலர் வே.கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.