.

Pages

Tuesday, June 26, 2018

பட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 100 % மானியம்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.

பண்ணைக் குட்டைகள், மழை பெய்கின்றபொழுது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து வைத்து அந்நிலத்தில் பயிர்களின் முக்கியமான வளர்ச்சி பருவத்தில், பயிர்கள் நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் பொழுது பயிர்களுக்குத் தக்க நேரத்தில் உயிர்பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது.  இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது.

பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பினைப் பெற்ற அமைப்பாகவும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகளை ரூ.100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் 250 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூபாய் 2.50 கோடி மானியத்தில் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட உள்ளன.

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆர்வமுள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, பட்டுக்கோட்டை அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04373-222816) தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.