அதிரை நியூஸ்: ஜூன் 28
அமீரகத்தையும் சவுதி அரேபியாவையும் இணைக்கும் சர்வதேச சாலையின் பெயர் ஷேக் கலீபா பின் ஜாயித் ஹைவே என்பதாகும், இதற்கு முன் அல் மப்ரக் - அல் குவைபத் நெடுஞ்சாலை என அழைக்கப்பட்டு வந்தது. இந்த சாலையில் மட்டும் தான் வாகனங்கள் மணிக்கு 160 கி.மீ எனும் அசூர வேகத்தில் செல்ல அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சர்வதேச நெடுஞ்சாலையில் புதயி மேம்பாலங்கள் கட்டுமானம், இணைப்பு சாலைகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் என பல நடைபெற்று வருவதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 6 மாத காலத்திற்கு மணிக்கு 160 கி.மீ வேகம் என்ற நிலையிலிருந்து மணிக்கு 120 கி.மீ என புதிய வேகக்கட்டுப்பாட்டை விதித்து அபுதாபி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அல் ஹமீம் மேம்பாலம் முதல் அல் தபியா மேம்பாலம் வரை இருபுறமும் புதிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு துணை சாலைகள் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இந்த நெடுஞ்சாலையில் ரேடார் கேமிராக்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் போது இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தையும் சவுதி அரேபியாவையும் இணைக்கும் சர்வதேச சாலையின் பெயர் ஷேக் கலீபா பின் ஜாயித் ஹைவே என்பதாகும், இதற்கு முன் அல் மப்ரக் - அல் குவைபத் நெடுஞ்சாலை என அழைக்கப்பட்டு வந்தது. இந்த சாலையில் மட்டும் தான் வாகனங்கள் மணிக்கு 160 கி.மீ எனும் அசூர வேகத்தில் செல்ல அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சர்வதேச நெடுஞ்சாலையில் புதயி மேம்பாலங்கள் கட்டுமானம், இணைப்பு சாலைகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் என பல நடைபெற்று வருவதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை சுமார் 6 மாத காலத்திற்கு மணிக்கு 160 கி.மீ வேகம் என்ற நிலையிலிருந்து மணிக்கு 120 கி.மீ என புதிய வேகக்கட்டுப்பாட்டை விதித்து அபுதாபி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அல் ஹமீம் மேம்பாலம் முதல் அல் தபியா மேம்பாலம் வரை இருபுறமும் புதிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு துணை சாலைகள் வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். இந்த நெடுஞ்சாலையில் ரேடார் கேமிராக்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் போது இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.