.

Pages

Saturday, June 30, 2018

புனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல்லை பாதுகாக்கும் காவலர்கள்!

அதிரை நியூஸ்: ஜூன் 30
புனிதமிகு கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் பதிக்கப்பட்டு அதனைச் சுற்று வெள்ளியிலான கவசம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புனிதக் கருப்புக்கல்லை தொட்டு முத்தமிட அல்லது கைகளால் தொட்டாவது திருப்தி கொள்ள என ஹஜ் மற்றும் உம்ரா போன்ற புனித யாத்திரைகளுக்கு வந்திருக்கும் யாத்ரீகர்கள் முயற்சிப்பார்கள். இந்த கருப்புக்கல் தரையிலிருந்து ஒன்றரை மீட்டர் உயரத்தில் உள்ளதுடன் தவாப் சுற்றலின் ஆரம்பம் மற்றும் முடிவின் அடையாளமாகவும் திகழ்கிறது.

இந்த கருப்புக்கல்லை பாதுகாக்க சிறப்பு பயிற்சி பெற்ற 24 காவலர்கள் மணிக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பாதுகாக்கின்றனர். இந்த சிறப்புக் காவலர்கள் பல்வேறு உடற்தகுதி மற்றும் தகிக்கும் வெயிலின் சூட்டை தாக்கும் சக்தி ஆகியவற்றை பின்னனியாக கொண்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் கருப்புக்கல்லையும் அதனை முத்தமிட முயற்சிக்கும் மக்களையும் தொடர்ந்து கண்காணிப்பதுடன் பலரும் இக்கல்லை பாதுகாப்புடன் முத்தமிடவும் உதவியும் செய்வார்கள்.

இந்த கருப்புக்கல் ஒரே பாறை துண்டு அல்ல மாறாக இது 8 துண்டுகளால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதுடன் ஆகப்பெரிய துண்டு ஒரு பேரீத்தம் பழத்தின் அளவே உள்ளது என்பதும் ஆச்சரியமான தகவலே. இந்த ஹஜருல் அஸ்வத் உள்ள பகுதி ஒவ்வொரு வக்து தொழுகையின் பின்பும் சுத்தம் செய்யப்படுவதுடன் கிருமி நாசினிகள், பன்னீர், அவுத் நறுமணம் பூசப்படுவதுடன் இதற்கெனவே தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பு பொருட்களை கொண்டும் சுத்தப்படுத்தப்படுகின்றன.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.