.

Pages

Wednesday, June 27, 2018

அமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 முதல் 10 திர்ஹம் சேவைக் கட்டணம்!

அதிரை நியூஸ்: ஜூன் 27
துபை நீங்கலாக அபுதாபி, ஷார்ஜா மற்றும் வட அமீரக பகுதிகளில் அபுதாபி எமிரேட்டுக்கு சொந்தமான அட்னாக் (Adnoc) பெட்ரோல் நிலையங்கள் இயங்குகின்றன. அபுதாபி எமிரேட்டுக்குள் இயங்கும் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் 10 திர்ஹம் சேவைக்கட்டணம் விதிக்கப்படவுள்ளது ஆனால் வட அமீரக பகுதிகளான புஜைரா, அஜ்மான், ராஸ் அல் கைமா மற்றும் உம்மல் குவைனில் சோதனை முயற்சிகள் தொடர்வதால் இங்கு பின்னொரு நாளில் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் சுயமாக அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டால் கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, அதேபோல் முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளும் சேவைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தற்போது நடைமுறையிலுள்ள வழமைபோல் அட்னாக் ஊழியர்களின் உதவியுடன் பெட்ரோலை நிரப்ப விரும்பினால் (premium Services) ஒவ்வொரு சர்வீஸிற்கும் கூடுதலாக 10 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கூடுதல் சேவைக் கட்டணத்திற்காக தரப்படும் ரசீதை கொண்டு அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் கார் வாஷ் செய்யும் போது அல்லது அட்னாக் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது குறிப்பிட்ட விகிதத் தள்ளுபடியை 30 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.

அட்னாக் நிலையங்களில் பெட்ரோல் கட்டணம் செலுத்த புதிய தொழிற்நுட்பம் அறிமுகம்:
வாகனங்களின் பெட்ரோல் டேங்க் அருகே 'ஸ்மார்ட் டேக்' (Smart Tag) ஒன்று பொருத்தப்படும். Radio Frequency Identification (RFID)  எனும் தொழிற்நுட்பத்தில் இயங்கும் இந்த டேக் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பியதற்கு ஏற்ப கட்டணத்தை உங்களுடைய பெட்ரோல் ப்ரீ பெய்டு கார்டுகள், எமிரேட்ஸ் ஐடிகள் மற்றும் அட்னாக் பிளஸ் கார்டுகள் ஆகியவற்றிலிருந்து அதுவே கழித்துக் கொள்ளும். இந்த ஸ்மார்ட் டேக்குகளை பொருத்திக் கொள்ள முன்வரும் முதல் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசம் அதற்குப் பின் 50 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.