.

Pages

Friday, June 29, 2018

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், ஜூன் 29
கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 24 ந் தேதி கோவையில் கொஜீரியோ கராத்தே கழகம் நடத்திய தேசிய அளவிளான கராத்தே போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவி என். சிம்லாதேவி, 10 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட “கட்டா” பிரிவில் முதல் பரிசும் 40 கிலோ எடை சண்டை பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். மேலும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.நிகிலேஷ்வரன் 25 கிலோ எடை சண்டை பிரிவில் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா வெள்ளிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கராத்தே பயிற்சியாளர் என்.நாடிமுத்து (A Dan Black Belt) ஆகியோரை பள்ளித் தாளாளர் வீ. சுப்ரமணியன், முதல்வர் என்.ரகுபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.