.

Pages

Tuesday, June 26, 2018

தஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (26.06.2018) நடைபெற்றது. 

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; 
அரசு அலுவலகங்கள், பொது சுகாதார மையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மக்கள் கூடும் இடங்களில், சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.  பிற்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் விடுதிகள் உள்ள நீர்தேக்க தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யவும், கழிவு நீர் தேங்காமல் பராமரிக்கவும், மாணவர்களுக்கு தொற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

தொற்று நோய் குறித்து சிகிச்சை வழங்கிட போதுமான மருந்து கையிருப்பு அரசு சுகாதார நிலையங்களில் வைக்கப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட வேண்டுமெனவும், அரசு கட்டிடங்களில் மேற்கூரைகளில் குப்பைகளை அகற்றி, கழிவு நீர் தேங்காமல் பராமரிக்கவும், மழை நீர், கழிவு நீர் முறையாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நீர்தேக்க  தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டுமெனவும், நீர் தேக்க தொட்டிகளிலிருந்து குழாய்களுக்கு செல்லும் வழியில் கசிவுகள் மூலம் நீர் தேங்காமல் இருக்க, கசிவுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமெனவும், தனியார் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுவதை முறைப்படுத்த வேண்டுமெனவும், தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பொது மக்கள் கூடும் இடங்களான சமுதாய கூடம், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் சேரும் கழிவுகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் அவற்றை பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், உள்ளாட்சி துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டிகளில் மாதம் இருமுறை சுத்தம் செய்யவும், நீர் தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் செல்லும் குழாய்களில் கசிவுகள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.  மேலும், உள்ளாட்சித் துறைகள் மூலம் பொது மக்களிடையே சுகாதாரம் மற்றும் கொசு ஒழிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், அதனால் ஏற்படும் தொற்று நோய், காய்ச்சல் பற்றியும், கொசுக்கள் உற்பத்தியாக்கும் இடங்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.

மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம் நிலவேம்பு கசாயம் பொடி, மலை வேம்பு கசாயம் பொடி, பப்பாளி சாறு ஆகியவை தேவையான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.  தேவைப்படுபவர்கள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அணுகி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், பொது சுகாதாரத்துணை துணை இயக்குநர் டாக்டர் சுப்பிரமணியன், மலேரியா அலுவலர் திரு.போத்திபிள்ளை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.