.

Pages

Wednesday, June 27, 2018

தஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அனுமதி ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை, மாவட்ட தொழில் மையத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) 1949-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். இந்நிறுவனத்தில் சிறு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கி உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் நோக்கம் புதிய உற்பத்தி தொடங்கவும், புதிய சேவை நிறுவனங்கள் (மருத்துவ துறை, போக்குவரத்து வாகனங்கள், உணவக விடுதிகள் போன்றவை) தொடங்குவதற்கு ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவாக்கம் செய்வதற்கும் சிறு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் தமிழ்நாட்டில் சுமார் 122622 நிறுவனங்களுக்கு ரு.16582 கோடி அளவிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழில் முதலீட்டு கழகம் மூலம் ரூ.238.07 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 4208 தொழிற்சாலைகள் பயன் அடைந்துள்ளது. மருத்துவ பொருட்கள், இன்ஜினியரிங் தொழிற்சாலைகள், நவீன அரிசி ஆலைகள், தொழிற்கூடம் அமைத்தல் மற்றும் மருத்துவமனை, ஹோட்டல், திருமண மண்டபம் போன்றவைகள் நிறுவுவதற்கும் நிதியுதவி தொழில் முதலீட்டு கழகம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் முன்னோடி திட்டமான புதிய முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (NEEDS) மூலமாகவும் கடனுதவி அளிக்கப்படுகிறது. தொழில் முதலீட்டு கழகத்தின் திட்டங்கள் பொது கால கடன் திட்டம், குறு மற்றும் சிறு தொழில்களுக்கான திட்டம், இயந்திரங்கள்  மட்டும் வாங்க கடனுதவி திட்டம், My Doctor திட்டம்,  Doctor Plus திட்டம், உணவக விடுதிகள் திட்டம், வாகன கடன் திட்டம், கல்யாண மண்டபம், சமூக கூடம், மாநாட்டு கூடம், வணிக வளாக திட்டம், காற்றாலை திட்டம், மின் ஆக்கிகள் வாங்குவதற்கான திட்டம், தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், நடைமுறை மூலதன காலக்கடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பொருட்கள்  (TNEB) வழங்குபவர் / ஒப்பந்தாரர்களுக்கான பட்டியல் நிதியுதவி திட்டம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய நிறுவனத்தின்  (TWAD) ஒப்பந்தகாரர்களுக்கான பட்டியல் நிதியுதவி திட்டம்  போன்ற பல்வேறு சிறு குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறு குறு தொழில் செய்யும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் செய்வதற்கும், புதிய தொழில் தொடங்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

மேலும் தஞ்சாவூரிலிருந்து விக்கிரவாண்டி வரையிலும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் வரையிலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்ட உள்ளது. இதனால் பொருட்களை விரைவில் கொண்டு செல்லவும், பயணநேரமும் குறையும்  என்றும் தெரிவித்தார்.
       
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் வீ.ஏகாம்பரம் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் பங்கு கொண்டனர். முன்னதாக கிளை மேலாளர் கி. சத்தியநாராயணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.