தஞ்சாவூர் ஜூன்.27-
சேதுபாவாசத்திரம் வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், வட்டார சுகாதார ஆய்வாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், ராஜகோபால், செல்வராஜ், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பூக்கொல்லை, குருவிக்கரம்பை, ரெட்டவயல், கொளக்குடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. எச்சரிக்கை விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதா. பள்ளிகள், கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறிய கடைக்காரர்களிடம் அபராதமாக ரூ 2 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
சேதுபாவாசத்திரம் வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில், வட்டார சுகாதார ஆய்வாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், ராஜகோபால், செல்வராஜ், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பூக்கொல்லை, குருவிக்கரம்பை, ரெட்டவயல், கொளக்குடி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. பதினெட்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா. எச்சரிக்கை விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதா. பள்ளிகள், கல்லூரிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமீறிய கடைக்காரர்களிடம் அபராதமாக ரூ 2 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.