.

Pages

Saturday, June 30, 2018

தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு  தகுதியான ஆட்கள் தேர்வு செய்திட தேர்வு முகாம்  வருகின்ற 21-07-2018 முதல் 29-07-2018 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.  தகுதியுள்ள திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு முகாமில் கலந்து  கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (29-06-2018) தெரிவித்துள்ளார்.

விமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 03-01-1998ற்கும் 02-1-2002ற்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எந்த வகையிலும் வயது தளர்வு கிடையாது. திருமணமாகதாவராக இருக்க வேண்டும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50% மொத்த மதிப்பெண்களும். ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு கட்டாயம் இடம் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும்.

1.6 கிலோ மீட்டர் தூரத்தினை  6 நிமிடங்கள் 30 விநாடிகளுக்குள் கடக்கும் திறன், ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உடல் தள்ளும் திறன் (PUSH UPS), ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உட்கார்ந்து எழும் திறன் (SIT UPS), ஒரு நிமிடத்திற்குள் 20 முறை குந்தி எழும் திறன் (SQUATS)  ஆகிய உடற் தகுதிகளை பெற்றிருக்க  வேண்டும்.

குறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரமும், உயரத்திற்கு தகுந்தாற்போல் உடல் எடையும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நிலை உடையவராகவும். எவ்வித தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் இல்லாமலும் இருக்க வேண்டும்.  இரு கண்களும்  6-36 என்ற அளவில் தூரப்பார்வை திறனும். ±3.50D-க்கு  மிகாமல் கிட்டப்பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியிருந்தால் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டார்.

மேலும் விபரங்களுக்கு www.airmenselection.gov.in மற்றும் www.airmenselection.cdac.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.