அதிரை நியூஸ்: ஜூன் 30
துபையில் விபத்தில் சிக்கியிருக்கும் பிறருக்கு உதவவே மனிதமனங்கள் பொதுவாக விரும்பும் ஆனால் அத்தகைய மனிதாபிமான உதவிகள் சற்றே பிசகினாலும் உங்களை சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதால் கடுமையான வாகன விபத்தில் சிக்கிவோரை மீட்கப்போய் மாட்டிக் கொள்ளாதீர் என எச்சரித்துள்ளது துபை ஆம்புலன்ஸ் சேவைக் கழகம், (Dubai Corporation for Ambulance Services - DCAS) ஏன்?
விபத்தில் சிக்கியிருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்று உங்களுடைய மனம் விரும்புவது வரவேற்கத்தக்கதே என்றாலும் உங்களுடைய அதீத ஆர்வத்தால் விபத்தில் சிக்கியவருக்கு மேலும் காயங்களோ, உடல் ஊனமோ அல்லது மரணமோ விளையக்கூடும், இந்நிலை நீங்கள் மனிதாபிமானத்துடன் உதவப்போய் ஊனமோ, மரணமோ ஏற்பட்டதால் சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை பெறக்கூடும் என விளக்கமளித்துள்ளது DCAS.
துபையில் அதிகப்பட்சம் 8 நிமிடத்திற்குள் மருத்துவ உதவிகள் கிடைக்கும் வகையிலேயே கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கியவர்களுக்கான உதவிகளை மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்கள் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியெல்லாம் 999 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிப்பது மட்டுமே.
மேலும், துபையில் ஆம்புலன்ஸ் சேவை கழகத்தினரால் 3 கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் வென்று சான்றிதழ் வைத்திருப்போரும் விபத்து காலங்களில் களமிறங்கி உதவலாம் என்றாலும் அவர்களும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர் தகவல் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசணையையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Apart from paramedics, doctors and those who have obtained a certification after passing a three-stage medical training course from DCAS can attend to a patient but they will also have to be in touch with the operations room.
மனிதர்கள் எப்போதும் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களே என்பதையும் நாங்கள் அறிந்துள்ளதால் ஒரு நல்ல மாற்றுத் திட்டமாக விரைவில் இத்தகைய சமூக ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு அவர்களுக்கான சிறப்புப் பயிற்சி ஒன்றையும் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றோம் இப்பயிற்சியின் மூலம் அவர்கள் முறையான சட்டபூர்வ மருத்துவ உதவியாளர்களாக உதவ வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாகவும் ஆம்புலன்ஸ் சேவைக் கழகம் தெரிவித்துள்ளது.
“We believe that people are ready to help, they just need the proper skills. We are soon announcing new volunteer opportunities for those who would like to get the right training and become qualified in providing medical assistance,”
இதற்கிடையில், சாலை விபத்துக்கள் மற்றும் அவசரகால உதவி தேவைப்படுவோரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பிற வாகன ஓட்டுனர்கள் மீது கடும் அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் விபத்தில் சிக்கியிருக்கும் பிறருக்கு உதவவே மனிதமனங்கள் பொதுவாக விரும்பும் ஆனால் அத்தகைய மனிதாபிமான உதவிகள் சற்றே பிசகினாலும் உங்களை சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதால் கடுமையான வாகன விபத்தில் சிக்கிவோரை மீட்கப்போய் மாட்டிக் கொள்ளாதீர் என எச்சரித்துள்ளது துபை ஆம்புலன்ஸ் சேவைக் கழகம், (Dubai Corporation for Ambulance Services - DCAS) ஏன்?
விபத்தில் சிக்கியிருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்று உங்களுடைய மனம் விரும்புவது வரவேற்கத்தக்கதே என்றாலும் உங்களுடைய அதீத ஆர்வத்தால் விபத்தில் சிக்கியவருக்கு மேலும் காயங்களோ, உடல் ஊனமோ அல்லது மரணமோ விளையக்கூடும், இந்நிலை நீங்கள் மனிதாபிமானத்துடன் உதவப்போய் ஊனமோ, மரணமோ ஏற்பட்டதால் சட்டத்தின் பிடியில் சிக்கி தண்டனை பெறக்கூடும் என விளக்கமளித்துள்ளது DCAS.
துபையில் அதிகப்பட்சம் 8 நிமிடத்திற்குள் மருத்துவ உதவிகள் கிடைக்கும் வகையிலேயே கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கியவர்களுக்கான உதவிகளை மருத்துவர்களும் மருத்துவ உதவியாளர்கள் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியெல்லாம் 999 என்ற எண்ணில் அழைத்து தகவல் தெரிவிப்பது மட்டுமே.
மேலும், துபையில் ஆம்புலன்ஸ் சேவை கழகத்தினரால் 3 கட்டங்களாக நடத்தப்படும் தேர்வில் வென்று சான்றிதழ் வைத்திருப்போரும் விபத்து காலங்களில் களமிறங்கி உதவலாம் என்றாலும் அவர்களும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர் தகவல் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசணையையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Apart from paramedics, doctors and those who have obtained a certification after passing a three-stage medical training course from DCAS can attend to a patient but they will also have to be in touch with the operations room.
மனிதர்கள் எப்போதும் பிறருக்கு உதவும் மனம் படைத்தவர்களே என்பதையும் நாங்கள் அறிந்துள்ளதால் ஒரு நல்ல மாற்றுத் திட்டமாக விரைவில் இத்தகைய சமூக ஆர்வலர்கள் பயன்பெறும் பொருட்டு அவர்களுக்கான சிறப்புப் பயிற்சி ஒன்றையும் வழங்க ஏற்பாடு செய்து வருகின்றோம் இப்பயிற்சியின் மூலம் அவர்கள் முறையான சட்டபூர்வ மருத்துவ உதவியாளர்களாக உதவ வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாகவும் ஆம்புலன்ஸ் சேவைக் கழகம் தெரிவித்துள்ளது.
“We believe that people are ready to help, they just need the proper skills. We are soon announcing new volunteer opportunities for those who would like to get the right training and become qualified in providing medical assistance,”
இதற்கிடையில், சாலை விபத்துக்கள் மற்றும் அவசரகால உதவி தேவைப்படுவோரின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் பிற வாகன ஓட்டுனர்கள் மீது கடும் அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என துபை போலீஸ் எச்சரித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.