.

Pages

Wednesday, June 27, 2018

தஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப்பது குறித்து கலந்தாய்வுக்கூட்டம் (படம்)

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (27.06.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கேலி செய்வதை தடுக்கும் பொருட்டு கல்லூரி முதல்வரை தலைமையாக கொண்டு குழு அமைத்திட வேண்டும். அக்குழுவின் உறுப்பினர்களின் விவரங்கள் கைபேசி எண்கள் கல்லூரியின் வளாகத்தில் தெளிவாக ப்ளக்ஸ் போர்டு வைத்திட வேண்டும். இக்குழுவில் மாணவர் பிரதிநிதிகளும் சேர்க்கப்பட வேண்டும். கல்லூரி விடுதிக்கென்று ஒரு தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.  கல்லூரியில் முதலமாண்டு மாணவர்களுக்கென தனியாக விடுதிகள் பராமரித்திடவும், முதலமாண்டு மாணவர்களுக்கு முதலமாண்டு மாணவர்கள் என தனியே தெரியும் வகையில் தனி நிறத்தில் அடையாள அட்டை ரோப் வழங்கிட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கல்லூரியில் மாணவர்கள் புகார்கள் தெரிவித்திட ஒரு புகார் பெட்டி வைத்திட வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் வாகனம் நிறுத்துமிடம், சிற்றுண்டி மையம், மைதானம் ஆகிய இடங்கள் மற்றும் கல்லூரி வளாகத்திலும் கண்டிப்பான முறையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படவேண்டும். மேலும் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்தால் கண்காணிப்பு கேமிராக்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பெண்கள் விடுதிகளில் வெளிப்புறங்களில் கண்டிப்பான முறையில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள்  வருகைப் பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். கேலி செய்வது தொடர்பான புகார்கள் அளிக்கும் பொழுது எந்தவித தயக்கமின்றி காவல்துறையினர்  முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளாத வண்ணம் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்றவற்றில் மாணவர்களின் ஆர்வத்தினை செலுத்திடும் வண்ணம் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கல்லூரி நிர்வாக கல்லூரி வருகை புரிகின்ற புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக வரவேற்று நிகழ்ச்சிகளில் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கு மீது உத்வேகத்தை ஏற்படுத்திட வேண்டும்.   இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார், கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.