அதிரை நியூஸ்: ஜூன் 28
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் புதிய தொழிற்நுட்பத்தில் காய்கறி விவசாயம்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவின் கிராப் ஒன் (Crop One) நிறுவனமும் இணைந்து சுமார் 40 மில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய செங்குத்து அடுக்கு விவசாய பண்ணை (Vertical Farming) ஒன்றை துபை அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்கின்றன. இந்தப் பண்ணை 130,000 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது என்றாலும் இங்கு விளையும் காய்கறிகள் 900 ஏக்கர் பரப்பளவில் விளையும் காய்கறிகளுக்கு ஈடான விளைச்சலை தரும்.
இங்கு விளையும் கீரை மற்றும் காய்கறிகளை ஒரே நேரத்தில் 2,700 கிலோ அளவிற்கு அறுவடை செய்யப்படும். இந்த செங்குத்துப் பண்ணைகள் பூச்சி கொல்லி மற்றும் களைகள் இன்றி காணப்படுவதுடன் தினமும் பிரஷ்ஷான காய்கறிகளை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும். மேலும் இந்த செங்குத்து தொழிற்நுட்பத்தில் விளையும் பயிர்களுக்கு வெளியிடங்களில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவிலிருந்து சுமார் 1 சதவிகிதம் மட்டுமே தேவவைப்படும் அதாவது 99 சதவிகித தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
இந்த செங்குத்து பண்ணைக்கான கட்டுமானத் திட்டம் எதிர்வரும் 2018 நவம்பர் மாதம் துவங்கி 1 வருட காலத்திற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது அறுவடையை எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும் என்றும் இதன் மூலம் எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திடமிருந்து உணவைப் பெறும் சுமார் 105 சர்வதேச விமான நிறுவனங்களும், 25 விமான நிலைய லவுஞ்சுகளும் பிரஷ்ஷான உணவை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் புதிய தொழிற்நுட்பத்தில் காய்கறி விவசாயம்.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனமும் அமெரிக்காவின் கிராப் ஒன் (Crop One) நிறுவனமும் இணைந்து சுமார் 40 மில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய செங்குத்து அடுக்கு விவசாய பண்ணை (Vertical Farming) ஒன்றை துபை அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே அமைக்கின்றன. இந்தப் பண்ணை 130,000 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது என்றாலும் இங்கு விளையும் காய்கறிகள் 900 ஏக்கர் பரப்பளவில் விளையும் காய்கறிகளுக்கு ஈடான விளைச்சலை தரும்.
இங்கு விளையும் கீரை மற்றும் காய்கறிகளை ஒரே நேரத்தில் 2,700 கிலோ அளவிற்கு அறுவடை செய்யப்படும். இந்த செங்குத்துப் பண்ணைகள் பூச்சி கொல்லி மற்றும் களைகள் இன்றி காணப்படுவதுடன் தினமும் பிரஷ்ஷான காய்கறிகளை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும். மேலும் இந்த செங்குத்து தொழிற்நுட்பத்தில் விளையும் பயிர்களுக்கு வெளியிடங்களில் பயன்படுத்தும் தண்ணீரின் அளவிலிருந்து சுமார் 1 சதவிகிதம் மட்டுமே தேவவைப்படும் அதாவது 99 சதவிகித தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
இந்த செங்குத்து பண்ணைக்கான கட்டுமானத் திட்டம் எதிர்வரும் 2018 நவம்பர் மாதம் துவங்கி 1 வருட காலத்திற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 டிசம்பர் மாதத்தில் தனது முதலாவது அறுவடையை எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திற்கு வழங்கும் என்றும் இதன் மூலம் எமிரேட்ஸ் கேட்டரிங் நிறுவனத்திடமிருந்து உணவைப் பெறும் சுமார் 105 சர்வதேச விமான நிறுவனங்களும், 25 விமான நிலைய லவுஞ்சுகளும் பிரஷ்ஷான உணவை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி!
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.