.

Pages

Saturday, June 30, 2018

மனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்தை ~ மகன் இணைந்து கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: ஜூன் 30
மனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவியை தந்தை மகன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

சுறா மீன்கள் மனிதர்களையும் சீற்றத்துடன் தாக்கும் தன்மையுடையவை. ரீ-யூனியன் தீவில் (Re-Union Island) 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை உலகிலேயே மிக அதிகமாக சுமார் 16 சதவிகித சுறா தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக சுறா தாக்குதல்கள் குறித்த சர்வதேச ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் கார்டிப் நகரைச் சேர்ந்த தந்தையும் மகனுமான கோலின் மற்றும் சைமன் புரூக்கர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் கடந்த சில வருடங்களாக ஆய்வு செய்து சுமார் 250,000 யூரோக்களை செலவு செய்து இந்த செயற்கை துற்நாற்றக் கருவியை கண்டுபிடித்து வெற்றிகரமான சோதனைகளை செய்துள்ளனர்.

செத்த சுறா மீனின் வாடையை செயற்கையாக வெளியாக்கும் இந்த கருவியை பற்றி அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் தெரிவித்த போது இவர்களை 'மறைகழண்டவர்கள்' என ஒதுக்கித் தள்ளியதாம். தற்போது ரீ-யூனியன் தீவில் பலமுறை பரிசோதனைகளை மேற்கொண்டு நிரூபித்தபின் அரசு ஆதரிக்க முன்வந்துள்ளதாம்.

பொதுவாக சுறா மீன்கள் தன் இன சுறாக்களை உண்ணாது என்ற உண்மையின் அடிப்படையில் என்னுடைய ஆய்வுகளை தொடர்ந்தேன். இந்த ஆய்வின் முடிவில் செத்த சுறா மீனின் வாடையை உயிருள்ள மற்ற சுறாக்கள் விரும்புவதில்லை என அறிந்து கொண்டேன். அதனடிப்படையிலேயே இந்த செயற்கை செத்த சுறா துற்நாற்ற கருவியை உருவாக்கினேன் என கோலின் விபரித்தார்.

இதன் மூலம் கடலில் நீந்தும், நீர்ச்சறுக்கு (Surfing) விளையாட்டில் ஈடுபடுவோர் மட்டுமல்ல பிற கடல் வாழ் உயிரினங்களும் தப்பிப் பிழைக்கும் எனவும் தெரிவித்தார். தற்போது அரசு விஞ்ஞானிகளின் பரிசோதனைகளின் கீழ் உள்ள இந்தக் துற்நாற்றக் கருவிகள் 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர் தந்தை மகன் ஆராய்ச்சியாளர்கள்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.