அதிரை நியூஸ்: ஜூன் 28
8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிராமம் அமீரகத்தில் கண்டுபிடிப்பு
அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமான மரவாஹ் தீவில் (Marawah Island) சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் வீடுகளை கொண்ட பக்காவாக வடிவமைக்கப்பட்ட கிராமம் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டது.
கற்களை கொண்டு வீடும் அதன் கூறைகளும் கட்டப்பட்டுள்ளதுடன் பல்வேறு அறைகளுடன், தானியங்களை சேமிக்கவும், சமைக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் தனித்தனி பகுதிகள் என இன்றைய நவீனகால வீடுகளின் திட்டமிடல்களை ஒத்ததாக அமைந்திருக்கின்றன 'நியோலிதிக் பிரீயட்'(Neolithic Period) எனப்படும் 'புதிய கற்காலகட்ட வீடுகள்'
(new Stone Age).
இதுவரை 10 வீடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் சிதிலமடைந்துள்ள இவை 8,000 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்தன என்ற டிஜிட்டல் வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா பிராந்தியத்தில் மக்கள் நிரந்தரமாக தங்காமல் தங்களின் வேட்டையாடுதலுக்கு ஏற்றவாறு தங்களின் வளர்ப்பு கால்நடை பிராணிகளுடன் குடிபெயர்ந்து கொண்டே இருந்தனர் என்ற கோட்பாடு உடைந்துள்ளது.
இந்த நிரந்தர கல் வீடுகள் இங்கு காணப்பட்டாலும் இது விவசாய பூமியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இவர்களின் பிரதான தொழிலாக மீன் பிடித்தலும் கப்பலில் சென்று வணிகம் செய்வதுமாக இருந்திருக்கலாம் எனவும், இந்த கடல் வணிகத்தின் வழியாகவே தங்களுக்கான உணவு தானியங்களையும் இங்கு கொண்டு வந்திருக்கலாம் எனபதுடன் இது பண்டைய கால கடல் வணிகர்களின் பிரதான பாதையாகவும் இருந்திருக்கலாம் என்ற கருதுகோள்களும் வைக்கப்பட்டுள்ளன. Experts also believe that the ancient inhabitants of Marawah realised that the Gulf was an ancient ‘superhighway’ that connected them to their neighbours,
கடல் வணிகம் நடைபெற்றதன் சான்றாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களும் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள் மேலும் பல உண்மைகளை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது. இதுவரை அமீரகத்தில் அகழ்தெடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின்படி மரவாஹ் தீவின் கிராம வீடுகளே அமீரகத்தின் மிகப்பழைய வீடுகளாகும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட கிராமம் அமீரகத்தில் கண்டுபிடிப்பு
அபுதாபி எமிரேட்டுக்குச் சொந்தமான மரவாஹ் தீவில் (Marawah Island) சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் வீடுகளை கொண்ட பக்காவாக வடிவமைக்கப்பட்ட கிராமம் ஒன்று தோண்டியெடுக்கப்பட்டது.
கற்களை கொண்டு வீடும் அதன் கூறைகளும் கட்டப்பட்டுள்ளதுடன் பல்வேறு அறைகளுடன், தானியங்களை சேமிக்கவும், சமைக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் வீட்டிற்கு வெளிப்புறத்தில் தனித்தனி பகுதிகள் என இன்றைய நவீனகால வீடுகளின் திட்டமிடல்களை ஒத்ததாக அமைந்திருக்கின்றன 'நியோலிதிக் பிரீயட்'(Neolithic Period) எனப்படும் 'புதிய கற்காலகட்ட வீடுகள்'
(new Stone Age).
இதுவரை 10 வீடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன் சிதிலமடைந்துள்ள இவை 8,000 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு இருந்தன என்ற டிஜிட்டல் வரைபடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா பிராந்தியத்தில் மக்கள் நிரந்தரமாக தங்காமல் தங்களின் வேட்டையாடுதலுக்கு ஏற்றவாறு தங்களின் வளர்ப்பு கால்நடை பிராணிகளுடன் குடிபெயர்ந்து கொண்டே இருந்தனர் என்ற கோட்பாடு உடைந்துள்ளது.
இந்த நிரந்தர கல் வீடுகள் இங்கு காணப்பட்டாலும் இது விவசாய பூமியாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் இவர்களின் பிரதான தொழிலாக மீன் பிடித்தலும் கப்பலில் சென்று வணிகம் செய்வதுமாக இருந்திருக்கலாம் எனவும், இந்த கடல் வணிகத்தின் வழியாகவே தங்களுக்கான உணவு தானியங்களையும் இங்கு கொண்டு வந்திருக்கலாம் எனபதுடன் இது பண்டைய கால கடல் வணிகர்களின் பிரதான பாதையாகவும் இருந்திருக்கலாம் என்ற கருதுகோள்களும் வைக்கப்பட்டுள்ளன. Experts also believe that the ancient inhabitants of Marawah realised that the Gulf was an ancient ‘superhighway’ that connected them to their neighbours,
கடல் வணிகம் நடைபெற்றதன் சான்றாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் பாத்திரங்களும் கிடைத்துள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள் மேலும் பல உண்மைகளை கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது. இதுவரை அமீரகத்தில் அகழ்தெடுக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிகளின்படி மரவாஹ் தீவின் கிராம வீடுகளே அமீரகத்தின் மிகப்பழைய வீடுகளாகும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.