அதிராம்பட்டினம், ஜூன் 21
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியில்,
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடைகள், மழை நீர் வடிகால், கழிப்பறை, டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரயில் நிலைய முகப்புத் தோற்றம், கட்டுமானப்பூச்சு மற்றும் எலக்ட்ரிக் ஒயரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் நிலைய மேற்கூரை:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைப்பதற்கான முதல் கட்டப்பணி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதில், 50 டன் இரும்பில் மேற்கூரையை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் செய்து முடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 90 டன் இரும்பில் பணிகள் முடிந்துள்ளன. இதில், பர்லின் ஷெல்டர் மொத்தம் 140 தயார் நிலையில் உள்ளது. மேலும், நடைமேடை பகுதிகளில் அடித்தளத்தின் கட்டுமானப்பணி நடந்து வருகிறது, அதில், தூண்கள் நிலைநிறுத்தப்படும். இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்டும் பணி:
65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடத்தின் வெளிப்புறத்தின் ஒரு பகுதியில் வெள்ளை நிற வர்ணம் மற்றும் அறைகளின் உள்பகுதியில் உயர்தர வர்ணம் பூசும் பணி, நிலைய அறைகளின் தரைப் பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் பணி நடந்து முடிந்துள்ளது.
தண்டவாளம் அமைக்கும் பணி:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் உள்ள ப்ளாட் பாரம்-1, ப்ளாட் பாரம்-2 ஆகியவற்றில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் பின்னர், இப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள தற்காலிக தண்டவாளங்களை அகற்றிவிட்டு, டெல்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 360 மீட்டர் நீளமுள்ள புதிய தண்டவாளங்கள் ஏற்றிவரப்பட்டு பொருத்தப்படும்.
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவை:
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலகட்டத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து நெல், அரசி, தேங்காய், மீன், கருவாடு மற்றும் உப்பு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மீனவர்கள், வணிகர்கள் பெரிதும் பயனடைந்தனர்.
இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வந்துசெல்ல தனி பிளாட் பாரம் மற்றும் சரக்குகளை இருப்பு வைக்க கிடங்குகள் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சரக்கு வாகனங்கள் வந்து செல்ல பிரத்தியோகமாக ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இருந்து ஏரிப்புறக்கரை செல்லும் சாலையை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை) பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின், இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த வழித்தடத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அமைந்துள்ள சுற்றுப்புறபகுதிகளில் ரயில்வே துறைக்கு சொந்தமான போதுமான இடவசதி அமையப்பெற்றுள்ளதால், இந்நிலையத்தில், சரக்கு ரயில் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இப்பகுதி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் பெரிதும் பயனடைவர். திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் அறந்தாங்கி, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் சரக்கு ரயில் சேவை தொடங்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் காவல் நிலையம்:
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினத்தில் ரயில் நிலைய காவல் நிலையம் அமைப்பதற்கு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
காரைக்குடி - திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியில்,
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஒருங்கிணைந்த நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடம், 420 மீட்டர் நீளத்தில் நடைமேடைகள், மழை நீர் வடிகால், கழிப்பறை, டிக்கெட் கவுண்டர், பயணியர் ஓய்வு அறை என கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரயில் நிலைய முகப்புத் தோற்றம், கட்டுமானப்பூச்சு மற்றும் எலக்ட்ரிக் ஒயரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில் நிலைய மேற்கூரை:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைப்பதற்கான முதல் கட்டப்பணி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இதில், 50 டன் இரும்பில் மேற்கூரையை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் செய்து முடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 90 டன் இரும்பில் பணிகள் முடிந்துள்ளன. இதில், பர்லின் ஷெல்டர் மொத்தம் 140 தயார் நிலையில் உள்ளது. மேலும், நடைமேடை பகுதிகளில் அடித்தளத்தின் கட்டுமானப்பணி நடந்து வருகிறது, அதில், தூண்கள் நிலைநிறுத்தப்படும். இதில், 65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய மேற்கூரை, 1 மற்றும் 2-வது பிளாட் பாரம் ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை கூரை, 2-வது பிளாட் பாரத்தில் தலா 32 மீட்டர் நீளத்தில் 4 மேற்கூரைகள், 1-வது பிளாட் பாரத்தில், தலா 32 மீட்டர் நீளத்தில் 3 மேற்கூரைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்டும் பணி:
65 மீட்டர் நீளத்தில் ரயில் நிலைய கட்டிடத்தின் வெளிப்புறத்தின் ஒரு பகுதியில் வெள்ளை நிற வர்ணம் மற்றும் அறைகளின் உள்பகுதியில் உயர்தர வர்ணம் பூசும் பணி, நிலைய அறைகளின் தரைப் பகுதிகளில் டைல்ஸ் ஒட்டும் பணி நடந்து முடிந்துள்ளது.
தண்டவாளம் அமைக்கும் பணி:
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் உள்ள ப்ளாட் பாரம்-1, ப்ளாட் பாரம்-2 ஆகியவற்றில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் பின்னர், இப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள தற்காலிக தண்டவாளங்களை அகற்றிவிட்டு, டெல்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 360 மீட்டர் நீளமுள்ள புதிய தண்டவாளங்கள் ஏற்றிவரப்பட்டு பொருத்தப்படும்.
அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவை:
மீட்டர் கேஜ் பாதையாக இருந்த காலகட்டத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து நெல், அரசி, தேங்காய், மீன், கருவாடு மற்றும் உப்பு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மீனவர்கள், வணிகர்கள் பெரிதும் பயனடைந்தனர்.
இந்நிலையில், திருவாரூர் ~ பட்டுக்கோட்டை ரயில் வழித்தடத்தில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் வந்துசெல்ல தனி பிளாட் பாரம் மற்றும் சரக்குகளை இருப்பு வைக்க கிடங்குகள் அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சரக்கு வாகனங்கள் வந்து செல்ல பிரத்தியோகமாக ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் இருந்து ஏரிப்புறக்கரை செல்லும் சாலையை (காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை) பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற பின், இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த வழித்தடத்தில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் அமைந்துள்ள சுற்றுப்புறபகுதிகளில் ரயில்வே துறைக்கு சொந்தமான போதுமான இடவசதி அமையப்பெற்றுள்ளதால், இந்நிலையத்தில், சரக்கு ரயில் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், இப்பகுதி விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் பெரிதும் பயனடைவர். திருவாரூர் - காரைக்குடி வழித்தடத்தில் அறந்தாங்கி, அதிராம்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் சரக்கு ரயில் சேவை தொடங்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் காவல் நிலையம்:
காரைக்குடி ~ பட்டுக்கோட்டை~ திருவாரூர் ரயில் வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினத்தில் ரயில் நிலைய காவல் நிலையம் அமைப்பதற்கு திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிரை ரயில் நிலையத்திலிருந்து...
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.